வியாழன், 13 டிசம்பர், 2012

ஏர்டெல் டி.டி.எச் இல் விஸ்வரூபம்

எதிர்வரும் ஜனவரி 11-ந்தேதி கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளிவருகிறது. இதை தியேட்டர்களில் திரையிடப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே ஏர்டெல் டி.டி.எச்-ல் காண முடியும் என கமல்ஹாசன் தரப்பு தெரிவித்துள்ளது.

கமல் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' தியேட்டர்களில் வெளியிடப்படும் அதே நாள் டி.டி.எச் இலும் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படிச் செய்வதின் நோக்கம் திருட்டு  டிவிடி ஐ ஒழிப்பதுதான் என கமல்ஹாசன் கூறினார்.
இதனை தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர். கமல்ஹாசனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டாடா ஸ்கை, ஏர்டெல், ரிலையன்ஸ், வீடியோகான் உள்பட பிரபலாமன டி.டி.எச் நிறுவனங்கள் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டின. இதனால் கடும் போட்டி நிலவியது.
இறுதியாக டி.டி.எச். ஒளிபரப்பு உரிமையை ஏர்டெல் நிறுவனம் வாங்கியது. எனவே வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச். வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.வி.க்களில் கண்டு களிக்கலாம்.
ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.
சுமார் 150 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் படமானது உள்நாட்டு டி.டி.எச். நிறுவனங்களைத் தவிர மலேசியாவின் ஆஸ்ட்ரோ, சிங்கப்பூரின் பிரபல சிஸ் டெல், வளைகுடா நாடுகளின் இரண்டு டி.டி.எச் நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரபல டி.டி.எச். நிறுவனங்களுடனும் கமல்ஹாசன் தற்போது பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறார்.


திங்கள், 10 டிசம்பர், 2012

கமலின் கருத்துக்கு பிரியானி தயார்: முஸ்லீம் லீக்


உலக நாயகனின் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி முஸ்லிம் அமைப்புக்கள் சில எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று கமல் ஹாசன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காட்சிகள் இடம்பெறவில்லையாயின் ஜாதி மதம் பாராமல் பத்தாயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே முஸ்லிம் லீக் அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் ஜவாஹிர் அலி கருத்து வெளிடுகையில், சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார். ஆனால் அத்திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தது. ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் பத்தாயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வரூப பிரச்சினையும் கமலின் விளக்கமும்

விஸ்வரூபம் படம் பற்றிய சர்ச்சை தீயாக பற்றிக்கொண்டுள்ள இந்த நேரத்தில் அதை பற்றிய விளக்க கட்டுரை ஒன்று எமுத வேண்டும் என்றிருந்த நேரத்தில் தலைவரின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அவரின் அளவிற்கு எனது விளக்கம் தெளிவாக இருக்காது என்பதால் கமலின் அறிக்கையை அப்படியே வெளியிடுகிறேன்.


DTH ஒரு புதிய பரிணாமம்:

புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும்கூட உலக வழக்கம்.

உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்… உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.

ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
இந்த DTH என்பது என்ன? எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு வி.ரூ வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

DTH வசதி தமிழக ஜனத்தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள DVDக் காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திர்கும் வீட்டில் மின் விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?

முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

-கமல் ஹாசன்

இதன் பிறகாவது இந்த கூட்டம் திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கில்லை இருந்தாலும் எம்மை போன்ற ஒரு சிலராவது புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இதை வெளியிடுகிறேன்.



சனி, 8 டிசம்பர், 2012

விஸ்வரூபம் : நான் சாப்பிட்டு உங்களுக்கு

எனது வெற்றிக்கு ரசிகர்கள் தான் காரணம், அவர்கள்தான் எனது பலம் என "விஸ்வரூபம்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

ஜனவரி 11-ல் திரைக்கு வர இருக்கும் கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த படத்தில் கதாநாயகிகளாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். 
விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழா நேற்று மதுரை, கோவை சென்னையில் நடந்தது. இறுதியாக சென்னையில் நடந்த விழாவில் கமல் பேசியதாவது: மதுரை, கோவை நகரங்களில் கிடைத்தது ஆர்ப்பாட்டமான அன்பு. சென்னையில் கிடைத்தது அமைதியான அன்பு. நான் குழந்தையாக இருந்தபோது தூக்கி கொஞ்சியவர்கள், நான் இளைஞனாக இருந்தபோது ரசித்தவர்கள். கொஞ்சம் வயதானபிறகு பார்த்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களும், ரசிகர்களும்தான் எனக்கு அச்சாணி, ஆணிவேர். இந்த அச்சாணிகளின் துணையால்தான் நான் கழன்று விடாத சக்கரமாக சுழன்று கொண்டிருக்கிறேன். 

என்னை உருவாக்கியவர்கள் முன்னால் எனக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பீத்திக் கொள்ளத்தான் இந்த விழாவை நடத்துகிறேன். சில பேர் மூன்று ஊர்களில் ஹெலிகாப்டரில் சென்று ஆடியோ வெளியிடப்போகிறேன் என்று சொன்னபோது நடக்கிற கதையா பேசுங்க என்றார்கள். இது நடக்கிற கதையல்ல பறக்குற கதையென்பதை நிரூபித்திருக்கிறேன். எனக்கு கரகோஷத்தின் மீது பேராசை உண்டு. அதற்கு அளவே இல்லை. அதற்கு நான் தகுதியானவனா என்று கூட பார்ப்பதில்லை. இந்த கரகோஷமும், ஆர்பாட்டமும், விஸ்வரூபம் படத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். விஸ்வரூபம் எல்லோருக்கும் பிடிக்கும். காரணம் எதையும் நான் சாப்பிட்டு பார்த்து எனக்கு பிடித்திருந்தால்தான் ரசிகர்களுக்குத் தருவேன். விஸ்வரூபம் நான் ரசித்து சாப்பிட்ட விருந்து. உங்களுக்கும் பரிமாறப்போகிறேன் என்றார்.
இவ் விழாவில், பங்கேற்பதற்காக விழா நடைபெற்ற வளாகத்துக்கு ஹெலிகாப்டரில் கமல்ஹாசன் வந்தார். விஸ்வரூபம் இசை சி.டி.யை கமல்ஹாசன் வெளியிட, அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவரும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரருமான பத்ரிநாத் பெற்றுக் கொண்டார்.
கமல்ஹாசன் மேடைக்கு வருவதற்கு முன்னர், அவரைப் பற்றி, அவரது நண்பரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியது:
 கமல்ஹாசன் நடிப்பதோடு நின்று விடாமல், திரைக்கதை இயக்குநர், நடன இயக்குநர், இசையமைப்பாளர் என திரைத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியக் கூடிய சகலகலா வல்லவன். சிறந்த நகைச்சுவைத் திறன் உடையவர். தமிழின் மீது அவருக்குப் பிரியம் அதிகம்.

 அதனால் கவிதை எழுதுவதிலும் சிறந்தவராக விளங்குகிறார். படத்துக்குப் படம் அவருடைய உழைப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிகச் சிரமத்துடன் சோதனைகளை, சாதனைகளாக மாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே. செய்யுளாக இருந்தாலும், கருத்துகளாக இருந்தாலும் ஒருமுறை கேட்டவுடன், அதை உடனடியாக மனதில் பதிய வைக்கும் ஆற்றல் கமல்ஹாசனிடம் அதிகம். வீட்டில் பெரிய நூலகத்தை வைத்திருக்கிறார். அந்த அளவுக்குப் புத்தகப் பிரியர்.

 எங்கு சென்றாலும் இரண்டு புத்தகங்களை வாங்கும் பழக்கம் அவரிடமும், என்னிடமும் உண்டு. ஒன்று அவருக்கு மற்றொன்று எனக்கு. வட்டார வழக்கில் தமிழ் மொழியைச் மிகச் சிறப்பாக பேசக் கூடியவர் என்றார்.
விழாவில் இளையராஜா, பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிகுமார், தரணி, லிங்குசாமி, பிரபு, ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

வியாழன், 6 டிசம்பர், 2012

விஸ்வரூபம் முதலில் டிவியில்


 விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.


எதிலும் புதுமைகளை படைப்பதில் கமலுக்கு நிகர் கமல் தான். ஹாலிவுட் தரத்தில் தான் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.இல் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். இதனால் தாங்கள் பெருமளவு பாதிக்கப்டுவோம் என்று தியேட்டர் அதிர்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கமல் தரப்புக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் பிரச்னை உருவாகியுள்ளது. 

கமல் திட்டப்படி விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு பெரிய நடிகரின் படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டி.டி.எச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டி.டி.எச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

விஸ்வரூபம் படத்தின் டி.டி.எச் வெளியீட்டு விவகாரம் ஒருபக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்க, கமல் ஹாஸனோ அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிஸியாகிவிட்டார்.இப்படம் ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கும் அதே வேளை நாளை 7ம் தேதி படத்தின் ஆடியோ ரிலீசும் நடக்கவிருக்கிறது.

சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ள விஸ்வரூபம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஏற்கெனவே ஜெயா டிவி வாங்கிவிட்டது. இப்போது இசை வெளியீடு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையும் பெற்றுள்ளது. மூன்று நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் ஜெயா டிவிதான் ஒளிபரப்பப் போகிறது.

திறந்தவெளி மைதானத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவது கமலுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தனது விருமாண்டி பட இசை வெளியீட்டை கேம்பகோலா மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தியவர் கமல் என்பது நினைவிருக்கலாம்.

சனி, 23 ஜூன், 2012

இடி அமீன்


ஏற்கனவே சர்வாதிகாரி ஹிட்லர் பற்றி எழுதியிருக்கிறேன். இன்று இடி அமீன் பற்றி எழுதப்போகிறேன். இடி அமீனின் சர்வாதிகாரத்தை பார்கக்கும் போது ஹிட்லர் பரவாயில்லை என்று தோன்றுகிறது. நீர்யானையின் கல்லீரலிலிந்து மனித மாமிசம் வரை இவன் ருசித்திருக்கின்றான் என்று இவருடன் நெருங்கிப் பழகிய அதிகாரிகள் மூலம் தெரியவந்துள்ளது. இரக்கம் என்ற வார்த்தைக்கும் இவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 
இடி அமீன் உலகின் அதி பயங்கர கொடுங்கோலரின் ஒருவன். அமீன் பிறந்த ஆண்டு சம்பந்தமாக சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924, 1925 இல் அல்லது மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்று தெரிகிறது.


தாயால் வளர்க்கப்பட்ட இவன் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த விவசாயியின் மகன் ஆரம்ப கல்வி மட்டுமே பயின்ற இவன்  1946 இல்  சமையல் காரனாக ரானுவத்தில் சேர்ந்து  பின்னர் படிப்படியாக லெப்டினன்ட் ஆக பதவி பெற்றான்.
 
உகண்டா நாடு மற்றும் அரசியல் பற்றி பார்தத்தால், ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa) என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்நாடு ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது. 1962 இல் உகண்டா ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுகந்திரம் பெற்றது. அதே ஆண்டு நடந்த பொது தேர்தலில் வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மில்டன் ஒபோடே வெற்றி பெற்று பிரதமரானார்.  இவர் ஒபோடே லாங்கி பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். இவர் ஆட்சிக்கு வரும் போது அந்நாட்டு மக்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்களாக பிரிந்து வாழ்ந்தனர். அவ்வினங்களுக்கென்று தனி தலைவர்களும் இருந்தனர் ஜாதி தலைவர்கள் போன்று. இந்நிலையில் புகாண்டா என்னும்  பழங்குடியின் தலைவரான கிங் பிரெடி என்பவரை உகாண்டாவுக்கு ஜனாதிபதியாக்கினார்.

ஒபோடே மற்றும் பிரெடி இருவருக்குமான நட்பு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இருவருக்கும் கருத்து முரன்பாடுகள் ஏற்பட ஒபோடே ஜனாதிபதி அதிகாரங்ளை பிரெடியிடமிருந்து பறிக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த புகண்டா இனத்தவர்கள் களவரதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதிகமாக வாழ்ந்த அவ்வின மக்களை அடக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட முரட்டுத்தனமான இராணுவ அதிகாரியே இடி அமீன். காக்வா இனத்தைச் சேர்ந்த இவன் பார்ப்பதற்கே பங்கரமாக இருப்பான் ஆறு அடிக்கு மேல் உயரம். குத்துச்சண்டை சாம்பியன் முரட்டு குணம் கொண்டவன்.
1966 இல் இடி அமின் மேஜர் ஜெனரல் ஆக ஒபோடே அசால் நியமிக்கப்பட்டான் அமீன் முதல் வேலையாக ஜனாதிபதி மாளிகையை பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தினான். இதனால் பீதியடைந்த ஜனாதிபதி நாட்டை வீட்டே பிரிட்டனுக்கு ஓடினார். பின்னர் ஒபோடேவுடன் சேர்ந்து உகண்டாவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லத் தொடங்கினான். இதற்கிடையே பிரிட்டனில் தஞ்சம் புகுந்த  ஜனாதிபதி நோயுற்று இறந்து போனார்.
ஜனவரி 1971 அன்று ஒபோடே காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூருக்கு விமானத்தில் பறந்தார். அவரிடம் பணிவோடு கைகுலுக்கி வழியனுப்பிய இடிஅமின், விமானம் கிளம்பியவுடன் ராணுவத்தின் ஒரு பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றி தான் நாட்டின் சர்வாதிகாரி என அறிவித்தான்.  சர்வாதிகாரியான அமீன் வெள்ளையர்களை தனது பல்லாக்கு சுமக்கும்  சிப்பந்திகளாகவும் குடை பிடிக்கவும் பயன்படுத்தி கொண்டதால் நாட்டு மக்களிடையே அமீனுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. 


ஆனால் அமீனுக்கு ஒரு பயம் இருந்தது. தான் இரானுவ அதிகாரியாக இருந்து ஆட்சியை கவிழ்த்து போல் தனக்கும் இது போல நடந்து விட்டால் என்னவாகும் என்று யோசித்த அமீன் அந்நாட்டின் முக்கிய உயர் இரானுவ அதிகாரிகளை இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்தான் இவ்விருந்தில் 36 பேர்வரை கலந்து கொண்டனர். அணைவரையும் திட்டமிட்டது போல் தனது அடியாட்களை வைத்து கொலை செய்தான். மறு நாள் தன்னை கொலை செய்ய சதி திட்டத்துடன் வந்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி ஏற்பட்டது என்று வானொலி மூலம் அறிக்கை விடுத்தான். 

நீதி கெட்டு வந்த ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சுலைமான் ஹுசைன் அவர்களையும் கொலை செய்து அவரது தலையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து உள்நாட்டு, அயல் நாட்டு பிரமுகர்களை அழைத்த விருந்தொன்றில் சுலைமானின் தலையை எடுத்து ஊறுகாயுடன் சேர்த்து ருசித்ததாகவும் தகவலொன்று கூறுகின்றது.

எழுதப்படிக்ககூடத் தெரியாத இடி அமீனுக்கு நாட்டின் தலை எழுத்து தனது கையில் இருந்ததால்,  நாட்டின் உயரிய  பட்டங்களை எல்லாம் அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். தனது  மார்பே மறைக்கும் அளவுக்கு ராணுவத்தின் எத்தனை பதக்கங்கள் உண்டோ அத்தனையும் எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்டான்.


இவன் செய்த கொலைகளும் தேசதுரோக செயல்களும் மக்களுக்கு தெரியாமல் போனமைக்கான முக்கிய காரணம் அந்த நேரத்தில் ஊடகங்கள் அதிகளவில் இல்லாமையே, இருந்த வானொலியும் அமீனின் கையில் என்பதால் உண்மைகள் மறைக்கப்ட்டன. ஆனாலும் உண்மைகள் கசிய ஆரம்பித்தது அதன் பிறது அமெரிக்க பத்திரிக்கை ஒன்றின் நிருபரான நிகோலஸ் ஸ்ட்ரோ என்பவரும் ராபர்ட் ஸைடில் என்கிற சமூகவியல் பேராசிரியரும் உகாண்டாவில் ராணுவ  கமாண்டரான மேஜர் ஜூமோ அய்கா என்பவனை சந்தித்து, இதுபற்றி விசாரிக்க போன போது அவர்களையும் அமீனின் ஆணைப்படி கொலை செய்தான் அய்கா. அத்தோடு உகண்டாவின் பொருளாதாரமும் மந்தகதியாகி அடிமட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. உதவி செய்யவும் எந்த நாடும் முன்வரவில்லை.

உகாண்டாவில் 50,000 க்கும் அதிகமாக ஆசிய மக்கள் வசித்து வந்தார்கள். இவர்களில் தொழிலதிபர்களாகவும் உயரிய பதவிகனையும் வகித்து, உகாண்டாவின் பொருளாதாரத்தையும் தூக்கி பிடித்து நிறுத்தினார்கள். ஆசிய தொழிலதிபர்களால் லட்சக்கணக்கான உகாண்டா மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது. இவர்கள் அணைவரையும் 90 நாட்களில் தனது நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிட்டான்.  பல தலைமுறைகளாக உகாண்டாவிலேயே பிறந்து, வளர்ந்த அணைவரும் கையில் மூட்டை முடிச்சிகளுடன்  நாட்டைவிட்டு வெளியேறின.
உகாண்டா அரசுக்கு லிபியா நாடு மட்டுமே எதோ நிதியுதவி அளித்து வந்தது. லிபியாவின் ஒரே கண்டிஷன் - யூதர்கள் அத்தனை பேரையும் நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் என்பதே அந்த கண்டிஷன். 1976 ஜூன் 28 ஆம் திகதி இஸ்ரேலிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை பாலஸ்தினிய தீவிரவாதிகள் கடத்தி, உகாண்டாவில் இறங்கினார்கள். விமானத்தில் அதிகமான யூதர்கள்.

ஜூலை 3 ஆம் தேதி நள்ளிரவு இஸ்ரேலிய கமாண்டோக்களைச் சுமந்துக்கொண்டு ஒரு ராணுவ விமானம் வந்து  இறங்கியது. விமானத்திலிருந்து பாய்ந்த கமாண்டோக்கள் விமான நிலையத்தில் புகுந்து, அத்தனை பயணிகளையும் காப்பாற்றி, தங்கள் விமானத்தில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டார்கள் குறுக்கே வந்த அமீனின்  ராணுவ வீரர்கள் அணைவரையும் சுட்டுத்தள்ளினார்கள். ஒரு மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.
1978 இல் உள்நாட்டு கலகங்களும் பொருளாதார பிரச்சனைகளும் உகண்டாவில் தலைவிரித்தாடத் தொடங்கியது அதனை மூடி மறைக்க அண்டை நாடான தான்சானியாவை போருக்கு அழைத்தான். ஆத்திரமடைந்த தான்சானியா மற்றும் உள்நாட்டு படைகள் எதிர்த்து தாக்கின பயிற்சியில்லாத அமீனின் இராணுவ வீரர்கள் சமாளிக்க முடியாமல் இறந்து போனார்கள்.
இடி அமின் லிபியாவில் தஞ்சம் புகுந்தான் பின்னர் அங்கேயும் எதிர்ப்பு அதிகரிக்கவே சில காலம் ஈராக்கில் வாழ்ந்தான் அவனுக்கு ஏறக்குறைய 40 பிள்ளைகளும் 8 மனைவிக்கு மேல் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இறுதிக்காலகட்டத்தில் 16 ஆகஸ்ட் 2003 அன்று மாரடைப்பால் இறந்து போனான். இடி அமின் இறந்த சில மணி நேரங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் புதைக்கப்பட்டான். மீண்டும் ஒபோடே ஆட்சி துவங்கியது.
அமீனின் ஆட்சியில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.

மனிதனாக பிறந்து மிருகமாக வாழ்ந்து மிருகமாகவே இறந்தான்.


புதன், 20 ஜூன், 2012

கார்ல் மார்க்ஸ்


காலம் எப்படி கி.மு- கி.பி என்று பிரிக்கப்படுகின்றதோ அதே போல் மனித வரலாற்றையும் மா.மு - மா.பி என்று பிரிக்கும் அனவிற்கு அவருடைய சிந்தனைகளும் கோட்பாடுகளும் அமைந்திருக்கின்றது.  

"உலகத் தொழிலளர்க்ளே ஒன்று படுங்கள் உங்க்களிடம் இழப்பத்ற்கு ஒன்றும் இல்லை பெறுவதற்கு ஒரு புதிய பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது" என்ற துவக்கத்துடன் தன்னுடைய பொதுவுடமை அறிக்கையை வெளியிட்டவர் கார்ல் மார்க்ஸ். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக பொதுவுடமையின் முக்கிய மூலவேராக இருந்தவர் கார்ல் மார்கஸ் .உலகின் மக்கள் தொகையின் பெரும் பகுதி மக்களின் தலை விதியை உன்னதமான முறையில் மாற்றி அமைத்தவர் . அவருடைய கொள்கையை உலக மக்கள் தொகையில் அதிகமானவர்கள் (சராசரியாக 130 கோடி என்று தெரிகிறது) பின்பற்றுகிறார்கள். வேறு எந்த கொள்கைகளையும் இவ்வளவு பேர் பினபற்றவில்லை.


கார்ல் மார்க்ஸ் உருவாக்க  முயன்ற சர்வதேச தொழிலாளர் மாநாடு 1889  ஜூலை 14 அன்று பரிசில் (ஃபிரான்ஸ்) நடைபெற்றது. பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உள்ளிட்ட பல தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் கார்ல் மார்க்ஸ் சொன்ன எந்த தொழிலாளர் ஆகினும் 8 மணிநேர உழைப்பு என்ற கொள்கையை உலகமயமாக்குவதாக தீர்மானிக்கப்பட்டது அதே கூட்டத்தில் மே முதல் திகதியை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் தத்தமது இயக்கங்களை நடத்திட, கொண்டாட ஒரு தினமாக தெரிவு செய்தார்கள்.அதுதான் மே தினம் 


கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx) பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ள ரைன்  நதிக்கரையின் அருகில் இருக்ம் ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதியில் உள்ள வீட்டில் 05-05-1818 ம் ஆண்டு பிறந்தார். தாய் ஹென்ரிட்டா, தந்தை ஹெர்ஷல் மார்க்ஸ் சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர். உடன் பிறந்தவர்கள் 8 பேர். மார்க்ஸ் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஜெர்மனியில்தான் (சொந்த நாடு பிரெஞ்சு) 12 வயதில் படிக்க ஆரம்பித்த இவர்  பான் பல்கலைக்கழகத்தில் வக்கில் படிப்பை (தந்தையின் விருப்பத்திற்காக) 25-08-1835 தந்தையால் முடித்துக்கொண்டார்.

கார்ல் மார்கஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமை வகுத்தவர்களுள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார்.

ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜென்னியின் (காதலி) தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது. ஜென்னி எனும் மிக அழகான படித்த பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையை முறையாக அமைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணினார். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம். 

பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

இதற்கிடையில் தனது காதலியான ஜென்னியை  1843ம் ஆண்டு ஜூன் 19ம் நாள் மணம் செய்து கொண்டார். ஜெனியை 17  ஆவது வயதில் காதலிக்க தொடங்கி 29 ஆவது வயதில் திருமணம் செய்தார் .

தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”.  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் அக்கட்டுரையின் கருவாக அமைந்தது. பிறகு ஜெர்மன் அரசால் அப்பத்திரிக்கை தடைசெய்யப்பட்டது. மார்க்சை நாடு கடத்தவும் அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டது. ஆனால் மார்க்ஸ் மன்னிப்பு கேட்டால் ஒரு வாய்ப்பு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியத்தில் குடியேறினார். 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து அந்நாடே பயந்து “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது. 


பிறகு மார்க்ஸ், நெசவுத் தொழில் அதிபரின் மகனான ஏங்கல்ஸ் உடன் சேர்ந்து  “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிராக “பொதுவுடமைச் சங்கம்”. உருவாக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர். இவர்கள் இருவரின் புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்சும் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்த காலத்தில் தனது உடைகளை அடகு வைக்கும் அளவிற்கு வறுமைப்பட்டார். ஒருமுறை வீட்டை விட்டு விரட்டப்பட்டார்.
தனது ஒரே ஒரு மகள் இறந்ததும் தன் நண்பருக்கு மீண்டும் கடிதம் எழுதினர் "இந்நாட்களில் நான் அனுபவித்த மிகையான துன்பங்களுக்கு இடையேயும் உன் நட்பும் நாம் இவ்வுலகத்திற்கு செய்ய வேண்டிய அறிவார்ந்த பணியும் இருக்கிறது என்ற நம்பிக்கையுமே என்னை நிமிர்த்தி வைத்துள்ளது" என்று எழுதினார் நியூ யார்க் டெய்லி பத்திரிக்கைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார் ஆனால் போதிய பலனளிக்கவில்லை. தனது மகள் இறந்த  சமயத்தில் ஜெனி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது தொட்டில் இல்லை. இறக்கும் போது சவப்பெட்டி கூட இல்லை”
1881ம் அண்டு,  டிசம்பர் மாதத்தில், மார்க்சின் காதல் மனைவி இறந்தார். ஜெனியின் இழப்பு மார்க்சை பெரிதும் வாட்டியது. இதன்பின்  15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி  1883 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி இலண்டனில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி இறந்தார். இறக்கும் போது 61வது வயது. இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) , The philosophers have only interpreted the world in various ways - the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சியினர் மார்க்சின் கல்லறையை அமைத்தனர். 
மார்க்ஸ் எழுதிய மூலதனம் ( DAS KAPITAL) என்ற நூலின் பாதிப்பு இன்றளவும் இருக்கின்றது. அந்நூல் பற்றி குறிப்பிடுவதானால், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வு கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியளாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்நூலில் கூறப்படுவது  நமக்கு ஒரு பொருள் தேவைப்பட்டால் அதை நாம் உற்பத்தி செய்வதில்லை கஷ்டப்படாமல் பணம் செலுத்தி வாங்கிக்கொள்கிறோம். யாரோ ஒரு தொழிலாளியில் உழைப்பிற்கு பணம் செலுத்துகிறோம். அப்பணத்தின் நியாயமான பகுதி தொழிலாளியை சென்றடைவதில்லை மாறாக உற்பத்தி நிறுவனங்களும் வியாபாரிகளும் உழைக்காமல் பெருலாபம் ஈட்டுகின்றனர். மற்றைய விடயம், போட்டி நிறைந்த வியாபாரத்தில் வியாபார அதிகரிப்பிற்காக பொருளின் விலை குறைக்கப்படுகின்றது. அதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க தொழிலாளி அதிகமாக உழைப்புக்குள்ளாக்கி நசுக்கப்படுகின்றான். இதுவே இந்நூலின் கருவாக அமைந்நதது.
மூலதனம்
முதல் பகுதி  1867
இரண்டாம்,முன்றாம் பகுதி அவரின் உற்ற நண்பனான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) இனால் தொகுத்து 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது. 
நான்காவது பகுதி Theories of Surplus-Value ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky இனால் தொகுத்து வெளியிடப்பட்டது.

“பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேலான விடயம்”. - கார்ல் மார்க்ஸ்

ஒரு சில தகவல்கள் : விக்கிபீடியா மற்றும் இணையம்




ஞாயிறு, 17 ஜூன், 2012

பிரபஞ்சம்

நமது பிரபஞ்சத்தில் சூரியன் மற்றும் கிரகங்கள் என்பனவற்றின் மையம் சூரியனே ஆகும். ஆனால் சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியே மையம் என்று கருதப்பட்டது. நமது பிரபஞ்ச தோற்றம் பற்றி யோசிக்கும் போது நமக்குள் ஏராளமான சந்தேகங்களும் கேள்விகளும் எழுவதை யாராளும் மறுக்க முடியாது. இவை அணைத்திற்கும் பதில் தருவது என்பது என்னால் முடியாத காரியம். முடிந்தளவு நான் படித்த தேடி அலசிய விடயங்களை உங்களுடன் பகிரப் போகிறேன்.

பிரபஞ்ச தோற்றம் பற்றி பார்த்தால் அணைவராலும் ஏற்றுக்கொள்ளப்ட்ட ஒரு கோட்பாடுதான் ஜார்ஜ் காமாவ் ஊகித்த "பெரு வெடிப்புக் கோட்பாடு" (Big Bang Theory)    20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.

"Big Bang Theory" எனப்படுவது  பூச்சியத்திலிருந்து (எதுவுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து) திடீரென வெடித்து பரவியதே இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ஆரம்ப நிலையை ஆங்கிலத்தில் "singularity" என கூறுவர். இந்த ஆரம்ப புள்ளிக்குள் தான் பிரபஞ்சத்தின் அடிப்படையான நான்கு விசைகள் தோற்றம் பெற்றன. புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, வலிமையான அணு விசை மற்றும் ஐதான அணு விசை என்பனவே அந்த நான்கு விசைகளாகும். singularity எனப்படும் அந்த ஆரம்பபுள்ளியினுள் சமநிலையில் இந்த நான்கு விசைகளும் காணப்பட்டன. புவியீர்ப்பு விசையினால் இந்த சமநிலை உடைக்கப்பட்ட போது ஒளியை விட வேகமாக அண்டம் விரிவடைய தொடங்கியது. இந்த விரிவாக்கமானது எல்லாத்திசையிலும் சமசீராகவே நடைபெற்றது. வெடிப்பு சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது கண்ணால் அவதானிக்கக் கூடிய பிரபஞ்ச வெளியை அடைக்கும் பொருள்,சக்தி என்பவற்றில் 70 வீதம் கரும் சக்தியும், 25 வீதம் கரும்பொருளும், 4 வீதம் விண்மீன்களுக்கிடையில் சிதறிக் கிடக்கும் ஐதரசன்,ஹீலியம் வாயுக்களும், 0.5 வீதம் நட்சத்திரங்களும்,0.3 வீதம் நியூட்ரினோக்களும்,0.03 வீதம் கடின மூலகங்களும் அடங்கியிருக்கின்றன. Big bang வெடிப்பு நிகழ்ந்து சுமார் 380,000ஆண்டுகளின் பிறகே முதலாவது நட்சத்திரம் தோன்றியதாக கூறபடுகிறது.

நட்சத்திரம் என்பது விண்வெளியில் இருக்கும் பெரிய ஒளிரும் கோளம் அல்லது வாயுக் கோளம் எனலாம். பல மில்லியன் வருடங்கள் உயிர் வாழும் நட்சத்திரம் ஒரு கோளமாக இருப்பதற்கு காரணம் அதிலிருக்கும் ஈர்ப்பு விசை. ஈர்ப்பு விசை ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி செயல் பட்டாலும் அது ஒரு புள்ளியில் விழாமல் இருப்பதற்கு காரணம் மைய விலக்கு அழுத்தம். இந்த இரண்டின் காரணமாக ஒவ்வொரு நட்சத்திரமும் நடுநிலையில் வாயுக்களின் கோளமாக இருக்கிறது. ஈர்ப்பு விசை வென்றால் நட்சத்திரம் சுருங்கும். அழுத்தம் வென்றால் விரிவடையும், வெடிக்கவும் செய்யும். நட்சத்திரத்தில் இருக்கும் வாயுக்கள் எரியும் போது ஈர்ப்பு விசைக்கு சமமான அளவு அழுத்தம் உண்டாகி நட்சத்திரத்தை நடுநிலை கொள்ள செய்கிறது. நட்சத்திரங்கள் எப்பொழுதும் நடுநிலையாக இருந்து விடுவதில்லை.
ஒரு நட்சத்திரத்தை சுற்றி உள்ள தூசு துணிக்கைகள் அந்த நட்சத்திரத்தின் புவியீர்ப்பு விசையினால் நெருகமடைந்து சிறிய துகள்கள் சேர்ந்து துணிக்கைகள் உருவாகின்றன. சிறிய அளவில் உள்ள துணிக்கைகள் சேர்ந்து கல்லாக மாறுகின்றன.காலபோக்கில் இவ்வாறு துணிக்கைகள் சேர்ந்து கோள்கள் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு தோற்றம் பெற்ற கோள்கள் புவியீர்ப்பு விசை காரணமாக நட்சத்திரங்களை சுற்ற ஆரம்பிக்கின்றன. இதனால் சூரிய குடும்பங்கள் தோற்றம் பெற்றன. 
பால் வீதி என்பது பல மில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும் ஒரு விண்மீன். விஞ்ஞானிகளின்  கணிப்பின்படி பிரபஞசத்தில் சுமார் 100 பில்லியன் விண்மீன்கள் உள்ளன. ஒவொரு விண்மீனிலும் சுமார் நூறு முதல் இருநூறு பில்லியன் வரையிலான நட்சத்திரங்கள் உள்ளன.
பால் வீதியின் விட்ட அளவை கணிக்க ஒளி ஆண்டு என்ற அளவு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம். ஒளி ஒரு நொடிக்கு 300,000 கிமீ செல்லும். ஒளி வருடம் என்பது 365 x 24 x 60 x 60 x 300,000 = 94,60,80,00,00,000 கிமீ . பால் வீதியின் விட்டம் கிட்டதட்ட 1,00,000 ஒளிவருடங்கள். 
பிரஞ்சத்தின் இன்றைய வயது சம்பந்தமாக பார்த்தால். பிக்பாங் நிகழ்ந்து 8 பில்லியன் வருடம் கழித்து சூரிய குடும்பம் உருவானதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.


பெருவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து இன்று வரை விரிவடையும் வேகம் அதிகரித்து கொண்டு வரும் பிரபஞ்சம் அண்ணளவாக 13.75 பில்லியன் வருடங்கள் பழையது ஆகும். இன்று பரிணாமமடைந்து வரும் பிரஞ்சத்தில் தற்போது காணப்படும் மிகப் பெரிய பொருள் சுப்பர்கிளஸ்டர்ஸ் எனும் விசேட அண்டங்களின் கூட்டு ஆகும். தற்போது விரிவடைந்து வரும் பிரபஞ்சம் அக வெளியில் வேறு பொருள் நுழைவதை தடுப்பதுடன் புதிதாக ஈர்ப்பு விசையுடைய பொருட்கள் உண்டாவதையும் நிறுத்துகின்றது.

சனி, 9 ஜூன், 2012

புளுட்டோ


ரோமானியர்களின் கடவுளின் பெயர் சூட்டப் பட்டுள்ள புளுட்டோ 1930-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு வரை மட்டுமே கிரகமாக கணிக்கப்பட்டது. இன்று அது குறுங் கோளாக வரையறுக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து  366 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சற்றி வர 248 ஆண்டுகள் ஆகும்.  புளுட்டோ பெருசிவல் லோவெல் என்பாரால் 1915லேயே கணிக்கப்பட்டு 1930ல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சாரோன் என்ற பெரிய நிலவும் இரு சிறிய நிலாக்களும் உள்ளன.

புளுட்டோவுடன் சாரோன் மற்றும் இரு சிறிய நிலவுகள்.


புளூட்டோவின் தோற்றம் பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றது முதலாவது : வியாழனிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு நிலவே புளூட்டோவானது. 
இரண்டாவது : சூரிய மண்டலத்தில் சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் சென்ற விண்கல் ஒன்று இறுதியில் புளூட்டோவாகி சூரியனைச் சுற்றி ஒழுக்கில் வர ஆரம்பித்தது. 


புளுட்டோ ஒரு கோள் அல்ல
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  'செக்' குடியரசின் தலைநகரில் பன்னாட்டு வானவியல் ஒன்றியத்தின் 26 வது பேரவை நடைபெற்றது. இவ் அமர்வில்  2500 வானவியலர்கள் கலந்துகொண்டார்கள். அதில் பல தீர்மானங்கள், அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் முக்கியமானது  இனி புளூட்டோ ஒரு கோள் கிடையாது, அது ஒரு குறுங்கோள் மட்டும என்று ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாகச் அறிவிக்கப்பட்டது. 

புளுட்டோவை ஒரு கோளாக மறுப்பதற்கான காரணங்களாக அமைவது.....
கோள் என்பது எந்த ஓர் இடையூறும் இல்லாத தன் சுற்றுப்பாதைச் சூழலில் அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும், சூரியனைச் ஒரு சுற்றுப் பாதையில் சுற்றிவர வேண்டும், தன் ஈர்ப்பு விசையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தேவையான தன்மையை உடையதும், கோளவடிவிலும் காணப்படுவதே கோள் ஆகும். ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’  நிபந்தனையை புளுட்டோ எட்டாததால், அதை கோள் எனக்கூற முடியாது என்ற முடிவிற்கு சர்வதேச வான இயல் நிபுணர்கள் வந்தார்கள்.

சுருக்கமான தகவல்கள்


சுற்றுப்பாதைப் பண்புகள்
சராசரி ஆரம் 5.91352×109 கி.மீ
வட்டவிலகல் 0.24880766
சுற்றுக்காலம் 248y 197d 5.5h
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம் (Synodic Period) 366.7 days
சராசரி சுற்று வேகம் 4.7490 km/s
சாய்வு 17.14175°
துணைக்கோள்களின் எண்ணிக்கை 1


இயல் பண்புகள்
நடுவரைக்கோட்டு விட்டம் 2320 km
புறப் பரப்பளவு 17 million km2
நிறை 1.290×1022 kg
சராசரி அடர்த்தி 2.05 g/cm3
பரப்பு ஈர்ப்பு 0.6 m/s2
சுழற்சிக் காலம் 6d 9h 17.6m
அச்சுச் சாய்வு 119.61°
எதிரொளிப்புத் திறன் (ஆல்பெடோ) 0.30
விலகு வேகம் 1.2 km/s


பரப்பு வெப்பநிலை
min     mean    max
33K     44K     55K


விண்பொருளின் வளிமண்டலம்
வளிமண்டல அழுத்தம் 0 - 0.01 கிலோ பாசுக்கல்
நைட்ரசன் 90%
மீத்தேன் 10%




வெள்ளி, 8 ஜூன், 2012

நெப்டியூன்


நெப்டியூன் (Neptune) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் சூரியக்குடும்பத்தில் இது நான்காவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது. நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டு இந்த வருடத்துடன் 166 வருடங்கள் ஆகின்றன. இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் கடந்த வருடம் தான் சூரியனை முழுமையாக சுற்றி முடித்தது. அதாவது, சூரியனை இந்த கிரகம் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 164.8 ஆண்டுகளாகும்.

ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருக்கக்கூடும் அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் மாற்றம் ஏற்படுகிறது என கணித்தனர்.

பிரெஞ்சு நாட்டவரான லெவெரியா மற்றும் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஆடம்ஸ் இருவரும் தனித்தனியே யுரேனஸ் மீது தாக்கம் செலுத்தி 8 வது கோளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றனர். யுரேனஸ் பாதையில் எத்தகைய தடுமாற்றம் ஏற்படுகிறது என்பதை வானவியல் ஆய்வுகள் காட்டின. மர்மக் கோள் எங்கு இருந்தால் இதே தடுமாற்றம் ஏற்படும் என்பதை கால்குலஸ் கொண்டு கணக்கிட முனைந்தனர்.

1846ல் ஆடம்ஸ் அவரது நாட்டின் தலை சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது முடிவுகளை எடுத்துச் சென்றார். எய்ரி, இதை சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய  ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்கு செவி மடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் திகதி சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டு சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர்.
இப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன், கடந்த ஆண்டு (2011) ஜூலை 12 ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும்.அதாவது நெப்டியூனுக்கு ஒரு வருடம் என்பது  164.8 புவி வருடங்கள்        ( கிட்டத்தட்ட 60,150 நாட்கள் ) ஆகும். நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 புவி மணித்தியாலங்கள்.
நெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விசேஷமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனை பின்பக்கமாக சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வரண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர்-2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான தகவல்கள்

சுற்று தரவுகள்
சராசரிஆரம் 4,498,252,900 km
வட்டவிலகல் 0.00858587
சுற்றுக்காலம் 164ஆ 288நா 13ம
தன்னைத் தானே - 16 மணி 6.5 நிமிடம்
சராசரி சுற்று வேகம் 5.4778 கிமீ/வி
சாய்வு 1.76917°
 துணைக் கோள்கள் 13

இயற்பியல் தரவுகள்
கோள்நடுக்கோட்டில் விட்டம் 49572 கிமீ
மேற்பரப்பு 7.65×109 கிமீ2
பொருண்மை 1.024×1026 கிலோகிராம்
சராசரி அடர்த்தி 1.64 g/cm3
மேற்புரஈர்ப்பு விசை 11.0 m/s2
சுழற்சிக் காலம் 16ம 6.5நி
அச்சு சாய்வு 29.58°
வெண் எகிர்சிதறல் 0.41
விடுபடு திசைவேகம் 23.71 km/s
மேற்பரப்பு வெப்பம்
குறைந்த   சராசரி    கூடிய
  50K               53K           இல்லை K

வளிமண்டல அமைப்பு
வளிமண்டல அமுக்கம் 100-300 kPa
ஐதரசன் >84%
ஈலியம் >12%
மெதேன் 2%
அமோனியா 0.01%
எதேன் 0.00025%
அசற்றலீன் 0.00001%

செவ்வாய், 5 ஜூன், 2012

யுரேனஸ்

 
பூமியை விட மூன்று மடங்கு பெரிய கனவளவை உடைய யுரேனஸ் சூரிய மண்டலத்தின் ஏழாவது கோளாகவும் விட்டத்தின் அடிப்படையில் மூன்றாவது மிகப் பெரிய கோளாவும் அமைந்துள்ளது. இந்த கிரகம் 1781 ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்ஷெல் என்பவரால் கண்டறியப்பட்டது. இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை. இதுவரை 27 துணைக் கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாதவை பல இருக்கக்கூடும்.
 
பூமியுடன் ஒப்பிடும் போது


வியாழனைப் போன்றே மிகப் பெரிய வாயுக் கோளான யுரனேஸ் இன் வளி மண்டலத்தில் ஐதரசன்,ஹீலியம், மெத்தேன் ஆகிய வாயுக்கள் பெருமளவு காணப்படுகின்றன. யுரேனஸில் வெறும் 2% வீதமே மெத்தேன் வாயு காணப்பட்டாலும் தொலைக் காட்டியால் நோக்கும் போது அதன் மேற்பரப்பு அழகிய நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் தென்படுவதற்கு இவ்வாயு காரணமாகின்றது. இதனைச் சுற்றி 11 வளையங்கள் காணப்படுகின்ற போதிலும் இவ்வளையங்கள் மிக மெல்லியதாக இருப்பதால் ஹபிள் போன்ற வினைத் திறன் மிக்க விண் தொலைக்காட்டிகளால் மட்டுமே இவை அவதானிக்கப் பட முடிவதுடன் வெறும் கண்களுக்கோ சாதாரண தொலைக்காட்டிகளுக்கோ இவை புலப்படுவதில்லை.

இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகிறது. இது தன்னைத் தானே ஒருமுறை சுற்ற 17 மணி 14 நிமிடங்கள் ஆகிறது. . யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.

வெள்ளியைப் போன்றே யுரேனஸும் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் போதும் தனது அச்சில் 90 பாகை சாய்வில் ஏறக்குறைய நீள்வட்டப்பாதையில் வலம் வருவதால் அது சூரியனைச் சுற்றி வரும் அதே பக்கத்தில் வடக்கிலிருந்து தெற்காக சுழலுவது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. மேலும் இத்தகைய முரணான தன்மை காரணமாக அங்கு பருவ காலங்கள் 20 வருடங்களுக்கு ஒரு முறையே மாறுகின்றன. யுரேன்ஸின் மேற்பரப்பிலும் வியாழன் மற்றும் சனி கிரகங்களைப் போலவே மிக வேகமாக கிட்டத்தட்ட 900Km/h வேகத்தில் காற்று வீசி வருகின்றது.

சுருக்கமான தகவல்கள்
  • சராசரி ஆரம் 2,870,972,200 km
  • வட்டவிலகல் 0.04716771
  • சுற்றுக்காலம் 84y 3d 15.66h
  • பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
  • (Synodic Period) 369.7 days
  • சராசரிச் சுற்றுவேகம் 6.8352 km/s
  • சாய்வு 0.76986°
  • உபகோள்களின் எண்ணிக்கை 27
  • மையக்கோட்டு விட்டம் 51,118 km
  • மேற்பரப்பளவு 8,130,000,000 km2
  • திணிவு 8.686×1025 kg
  • சராசரி அடர்த்தி 1.29 g/cm3
  • மேற்பரப்பு ஈர்ப்பு 8.69 m/s2
  • சுழற்சிக் காலம் -17h 14m
  • அச்சுச்சாய்வு 97.86°
  • வெண் எகிர்சிதறல் 0.51
  • தப்பும்வேகம் 21.29 km/s
  • ஐதரசன் - 83%
  • ஹீலியம் - 15%
  • மெத்தேன் - 2.3%
  • ஐதரசன் டெயூடெரைட் (HD) - 0.009% 
கடந்த 2006 ஆம் ஆண்டு ஹபிள் தொலைக் காட்டியால் யுரேனஸின் வட துருவத்தில் மிகப் பெரிய கரும் பொட்டு ஒன்றை அவதானித்தது. சுமார் 1700 Km நீளமும் 3000 Km அகலமும் உடைய இந்த கரும் பொட்டு பின்னர் வளிச் சுழல் எனத் தெளிவு படுத்தப் பட்டது.




புதன், 30 மே, 2012

சனி (கோள்)


சனி (SATURN) சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். ரோமானியர்களின் விவாசாயத்திற்கு உதவும் மிக முக்கிய கடவுளின் பெயரான Saturn எனும் பெயரைக் கொண்டுள்ளது.

சனி கோளானது சூரியனுக்கு அருகில் வரும்போது 840,000,000 கி.மீட்டர் தொலைவிலும், தூரத்தில் இருக்கும் போது 940,000,000 கி.மீட்டர் தொலைவிலும் இருக்கும். இது சூரியனைச் சுற்றிவர 10,759 நாட்கள் ஆகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 10 மணி 39 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. சனிக் கிரகத்தின் ஆரை பூமியை விட 9 மடங்கு அதிகம் என்ற போதும் அதன் அடர்த்தி பூமியை விட 8 மடங்கு குறைவாகும். அடர்த்தி குறைவு காரணமாக சனிக்கிரகத்தை தண்ணீரில் இட்டால் அது மிதக்கும் என்று கூறப்படுகின்றது. எனினும் சனிக்கிரகம் மிகப் பெரிய கனவளவைக் கொண்டிருப்பதால் இதன் நிறை பூமியை விட 95 மடங்கு அதிகம்.

சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இது பாறை மற்றும் பனிக்கட்டியாலான சிறிய உள்ளகமும் (core) அதைச் சுற்றி தடிமனான உலோக (மாழை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.

சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், அதிகளவில் பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆன வளையங்கள் 6630 Km இலிருந்து 120 700 Km வரை நீண்டு காணப்பட்ட போதும் இவற்றின் தடிப்பு மிகக் குறைவாக அதாவது வெறும் 20 மீற்றர் மற்றும் தோலின் மாசுக்கள் கொண்ட 93 சதவிகிதம் நீர்-பனி உள்ளது . மீதமுள்ள 7 சதவிகிதம் பளிங்குருவில்காபன் உள்ளது . வளையங்களில் சிறு புள்ளியிலிருந்து ஒரு வாகனத்தின் அளவு கொண்ட துணிக்கைகள் உள்ளன.சனியின் வளையங்களின் உருவாக்கம் குறித்து இருவேறு கோட்பாடுகள் உள்ளன .சனி உருவாகிய வான்புகையுருவின் எஞ்சிய பொருட்களே இவ்வளையங்கள் என்கிறது இன்னொரு கோட்பாடு. 

சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனியைச் சுற்றி அறுபத்தி ஒரு நிலவுகள் சுழல்கின்றன. இதில் தொண்ணூறு விழுக்காட்டை (இடை அளவில்) மிக பெரிய நிலவான டைட்டன் பங்களிக்கிறது. சனியின் இரண்டாவது பெரிய நிலவு ரியாவுக்கு சுற்றுவலயம் இருக்கிறது. மற்ற நிலவுகள் மிகவும் சிறியவை: 10 கிமீ விட்டத்தின் கீழ் முப்பத்து நான்கு நிலவுகள் மற்றும் 50 கிமீ விட்டத்தின் கீழ் பதினான்கு நிலவுகளும் இருக்கின்றன. சம்பிரதாயமாக, அனைத்து சனியின் நிலவுகளுக்கும் கிரேக்கக் கடவுள்களான டைடன்களின் பெயர்களே சூட்டப்படுகின்றன.

சனியை ஆராய்ந்த விண்கலங்கள் பற்றிப் பார்த்தால், நாசாவின் பயனீர் 11 விண்கலமும் அதன் பின்னர் வொயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்களும் இறுதியாக 2004 இல் கஸ்ஸினி விண்கலமும் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் கஸ்ஸினி செய்மதி மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. இதன் பணிகள் 2008 இல் முடிவடைந்த போதும் பின்னர் இச்செய்மதியின் ஆய்வுப்பணி 2010 செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு தற்போது 2017 வரை இதன் காலம் விரிவு படுத்தப்பட்டது. கஸ்ஸினி விண்கலம் சனியின் வளையங்கள் அதன் துணைக் கோள்கள் பற்றிப் பல தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது மட்டுமல்லாமல் சனியின் 8 புதிய துணைக் கோள்களையும் கண்டு பிடித்திருந்தது.

சனிக்கிரகம் பற்றிய சுருக்கமான தகவல்கள்

சுற்றுப்பாதை சிறப்பியல்புகள்

சராசரிஆரம் -1,426,725,400 கி.மீ
வட்டவிலகல் - 0.05415060
சுற்றுக்காலம் - 29y 167d 6.7h
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம் (Synodic Period) - 378.1 days
சராசரி சுற்றியக்க வேகம் - 9.6724 km/s
சுற்றுப்பாதையின் சாய்வு - 2.48446°
துணைக்கோள்களின் எண்ணிக்கை - 61

வளிமண்டல சிறப்பியல்புகள்
வளிமண்டல அழுத்தம் 140 kPa
ஹைட்ரசன் >93%
ஹீலியம் >5%
மீத்தேன் 0.2%
நீர் ஆவி 0.1%
அம்மோனியா 0.01%
ஈத்தேன் 0.0005%
பாஸ்பேன் 0.0001%


புறநிலை சிறப்பியல்புகள்

நடுவரைக்கோட்டு விட்டம் 120,536 km
புறமேற் பரப்பளவு 4.38×1010 km2
நிறை 5.688×1026 kg
சராசரிஅடர்த்தி 0.69 g/cm3
மேற்பரப்புஈர்ப்பு 8.96 m/s2
சுழற்சிக் காலம் நடுவரைக்கோட்டு 10h 13m 59s
சுழற்சிக் காலம் internal 10h 39m 25s
அச்சின் சாய்வு 26.73°
எதிரொளிப்பு திறன் 0.47
விடுபடு வேகம் 35.49 km/s
சராசரி மேல்மேக வெப்பநிலை 93K
மேற்பரப்புவெப்பநிலை  min   mean     max
                                             82K   143K       N/A K 
முடிந்தளவு சனிக் கோள் பற்றி தேடி எழுதியிருக்கிறேன். கோள்கள் பற்றி இன்னும் எவ்வளவோ ஆராய்ந்து பார்க்கவும் இருக்கின்றது. ஆனால் நம்மாள் ஒரே  இடத்தில் இருந்து கொண்டு ஜோதிடம் என்ற பெயரில் மோசடி செய்கின்றார்கள். இதில் என்ன கவலை என்றால் நன்கு படித்தவர்களும் இதை நம்புகின்றார்கள் என்பதுதான். 

நன்றி



வெள்ளி, 25 மே, 2012

வியாழன்

வியாழன்(Jupiter) சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரியமண்டலத்திலேயே மிகப் பெரிய கிரகமாகத் திகழ்வதால் அதற்கு ரோமானியர்கள் தமது கடவுள்களின் அரசனும் வானத்தின் தேவனுமான ஜுபிடர் எனும் பெயரைச் சூட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது. வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும். சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள ‌வியாழ‌ன் கிரகம், வி‌ண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடு‌த்தபடியாக பிரகாசமாகத் தெரியக் கூடிய ‌கிரகமாகும்.
ஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்களினால் பெரும் கனவளவு நிரப்பப் பட்ட பெரு வாயுக் கோளான வியாழன் ஜோவியான் அல்லது வெளிப்புறக் கிரகங்கள் நான்கிலும் மிகப் பெரியதும் அதிக ஈர்ப்புச் சக்தி உடையதுமான கோளாகும். 
சூரிய மண்டலத்தின் உட்கோள்களான (Inner Planets) புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் (Rocky Planets) போன்றில்லாது, புறக்கோள்களில் (Outer Planets) ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம். சூடான பாறையும், திரவ உலோகம் (Liquid Metal) சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. சூரிய சுற்றுப்பாதையில் (சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு (Earth Years) ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது.
பூமியுடன் வியாழனை ஒப்பிடும் போது
சூரியனிடமிருந்து சராசரியாக 484 மில்லியன் மைல் தூரத்திலும் பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை[Mass] பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது வியாழன். மேலும் சூரிய குடும்பத்தில் மிக அதிக பட்சமாக 64 துணைக் கோள்களை வியாழன் கொண்டுள்ளது. இவற்றில் கனீமிட் எனும் துணைக் கோள் புதன் கிரகத்தை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன் கிரகத்துக்குள் அடிக்கடி புயல்க‌ள் அடி‌க்கு‌ம். மூன்று பூமிக்கு இணையான பரப்பள‌வி‌ல் வீசிய ஒரு புயல், பல நூறு ஆண்டுகளுக்கு நீடித்து‌ள்ளது. தொலைநோக்கியால் பார்த்தால் வியாழன் கிரகத்தின் நிலாக்களைக் காணலாம். கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அனுப்பிய கலீலியோ விண்கல‌த்‌தி‌ல் இரு‌ந்த செ‌‌ன்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது.  
வியாழன் ரோபோட்டிக் விண்கலத்தாலும் நாசாவின் பயனீயர் மற்றும் வொயாஜெர் செய்மதிகளாலும் கலிலீயோ ஆர்பிட்டர் எனும் விண்கலத்தாலும் விரிவாக ஆராயப்பட்ட கிரகமாகும். மேலும் 2007 பெப்ரவரியில் வியாழனின் சுற்றுப்பாதை வழியாக புளூட்டோ கிரகத்தை ஆராயச் சென்ற நியூ ஹாரிஸன் எனும் விண்கலத்தால் சமீபத்தில் வியாழன் படம் பிடிக்கப்பட்டது. இவ்விண்கலம் வியாழனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி தனது வேகத்தை அதிகரித்துக் கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வியாழனின் துணைக் கோளான இயுரோப்பா பனிக்கட்டி மூலக்கூறுகளாலான சமுத்திரத்தை உடையது எனும் காரணத்தால் அது வானியலாளர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 
வியாழன் குறித்த சுருக்கமான தகவல்கள்
(தகவல்கள் விக்ககிபீடியா)