சனி, 26 ஜனவரி, 2013

“விஸ்வரூபம் விஷயத்தில் ஏன் பதுங்குகிறீர்கள் சக கலைஞர்களே?” பாரதிராஜா கேள்வி!


“தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று ஆச்சரியப்பட்டுள்ளார், இயக்குநர் பாரதிராஜா.
இயக்குநர் பாரதி ராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு கலைஞன் என்பவன் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சுறுதியோடு, பாரதியைப் போல சமூக விழிப்புணர்வுக்காக போராடுபவன். எழுத்தாளராகட்டும், கவிஞராகட்டும், திரைப்பட கலைஞனாகட்டும், எந்த துறையின் விமர்சகனுமாகட்டும், ஒரு படைப்பாளியாக துணிச்சலுடன் தன் கருத்தை பதிவு செய்பவனாக இருக்கவேண்டும். அதுதான் அவன் பொது வாழ்வின் சமூகக் கடமை.
பயந்து ஒளிபவன் படைப்பாளியாக, எழுத்தாளனாக, கலைஞனாக இருக்க முடியாது.
ஆனால் தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
திரையுலகில் ஒரு சிலர் மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் கலைஞர்களா?
திரையுலகில் இத்தனை அமைப்புகள் இருந்தும், அமைப்புகள் பிளவுபட்டு கிடப்பதாலோ, அல்லது தனிப்பட்ட மன மாச்சரியங்களாலோ யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இன்று கமல்ஹாசனுக்குத்தானே தலைவலி, வயிற்று வலி என்று நினைத்தால், நாளை நம்மில் ஒருவருக்கு இதே நிலை வரும் போது நிவாரணத்துக்கு யாரைத் தேடுவீர்கள்? எங்கே போவீர்கள்?
நமக்குள் ஒற்றுமை இல்லை.
கமல் என்ற தமிழ்க் கலைஞன் வியாபாரத்திற்காக தன்னை ஒரு போதும் அடகு வைத்தவன் அல்ல. சமூக பொறுப்புள்ளவன், மூட நம்பிக்கையை முறியடிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் திரையுலகில் மீசை வைக்காத பாரதியார். அவன் இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று படம் எடுப்பானா?
ஒரு முஸ்லீம் அங்கத்தினர் உட்பட தணிக்கைக் குழு அங்கீகரித்த ஒரு திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்று சிலர் சொன்னால், இந்த அரசியல் சட்டத்தில் நாம் எங்கே நின்று நியாயம் கேட்க வேண்டும் என்று புரியவில்லை. இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண, குடிமகனை கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.
ஒரு நல்ல கலைஞனை, ஒரு தமிழ் கலைஞனை, தமிழ்த் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.
என் இனிய தமிழ் மக்களே, நீங்கள் யோசிக்கத் தெரிந்தவர்கள், சிந்தித்துப் பாருங்கள். நியாயத்திற்கு போராடி ஒரு நடுநிலை கலைஞனுக்கு கை கொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை. தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம். தலை நிமிர்ந்து நிற்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி VIRUVIRUPPU

வெள்ளி, 25 ஜனவரி, 2013

வி‌ஸ்வரூப‌ம் டி‌க்கெ‌ட் கட்டண‌‌த்தை கொடு‌க்‌கிறது ‌தியே‌ட்ட‌ர்க‌ள்


வி‌ஸ்வரூப‌ம் பட‌த்த‌ை ‌‌ரி‌லீ‌ஸ் செ‌ய்ய 15 நா‌ட்க‌ள் தடை ‌வி‌தி‌த்து த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டது. இ‌ந்த உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து ர‌ா‌ஜ் க‌ம‌ல் ‌நிறுவன‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடர‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்‌கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், 26ஆ‌‌ம் தே‌தி அதாவது இ‌ன்று, பட‌த்தை பா‌ர்‌த்து 28ஆ‌ம் தே‌தி ‌தீ‌ர்‌‌ப்பு அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌த்தது. ஏ‌ற்கனவே ‌வி‌ஸ்வரூப‌ம் 25.01.2013 இ‌ன்று வெ‌ளியாகு‌ம் எ‌ன்று ‌விள‌ம்பர‌ங்க‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து, ர‌சிக‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ஏராளமானவ‌ர்க‌ள் ‌தியே‌ட்ட‌ர்க‌ளி‌ல் நே‌ரிடையாகவு‌ம், இணையதள‌ம் மூலமாகவு‌ம் டி‌க்கெ‌ட் வா‌ங்‌கின‌ர். இ‌ந்த‌ நிலை‌யி‌ல் த‌மிழக அர‌சி‌ன் ‌திடீ‌ர் தடையா‌ல், ‌வி‌ஸ்வரூப‌ம் வெ‌ளியாகு‌ம் ‌தியே‌ட்ட‌ர் உ‌ரிமையாள‌ர்க‌ள், டி‌க்கெ‌ட் வா‌ங்‌கியவ‌ர்களு‌க்கு பண‌த்தை இ‌ன்று முத‌ல் ‌திரு‌ம்ப கொடு‌க்‌கிறது.

செ‌ன்னை, சேல‌ம் உ‌ள்பட ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று காலை 11 ம‌ணி‌‌க்கு கவு‌ண்ட‌ர்க‌ளி‌ல் டி‌க்கெ‌ட்டு‌க்கான பண‌த்தை ‌திரு‌ம்ப பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று ‌தியே‌ட்ட‌ர் உ‌ரிமையாள‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வியாழன், 24 ஜனவரி, 2013

கமலுக்கு பெருகும் ஆதரவு

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தமிழக அரசு அந்தப் படத்தையே தடை செய்துள்ளது. 
இது கமலுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கமலுக்கு ஆதரவான சூழல் திரும்பியுள்ளது. திரையுலகினர் இந்தத் தடை குறித்து வெளிப்படையாக வாய் திறக்காத சூழலில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமலுக்கு ஆதரவு பெருகுகிறது. 
 கமலை ஆதரிக்கக் கோரி பலரும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர். ஐ சப்போர்ட் கமல் எனும் வாசகங்களுடன் சமூகத் தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டிடிஎச், திரையரங்க உரிமையாளர்கள் விவகாரத்தின்போது அமைதி காத்த சினிமாக்காரர்கள், இப்போது கமலுக்கு ஆதரவான நிலையை வெளிப்படையாக எடுக்க வேண்டியது அவசியம் என பேச ஆரம்பித்துள்ளனர். 
இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் - கம் - இயக்குநர், "நிச்சயம் கமல் பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு படைப்பாளிக்கு இதற்கு மேல் சிக்கல் இருக்க முடியாது. அதே நேரம் முஸ்லிம் சமூகத்தை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கவும் முடியாது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு திரையுலகினர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்காமலிருக்கக் காரணம் இதுதான்.
 ஆனால் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் இதுபோன்ற தடைகளை திரையுலகினர் இப்போது எதிர்க்காவிட்டால், சினிமாவில் புதிய முயற்சி என்பதே அருகிவிடும்," என்றார் (தன் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன்).
 நன்றி ONE INDIA

இந்த பிரச்சினை குறித்து ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் ஒன்றிணைந்து செயற்படும்போது தமிழக சினிமாவும் தமிழர்களும் மௌனமாக இருப்பது வேதனையளிக்கின்றது. ஏன் தமிழர்களிடம் இந்த ஒட்ற்றுமை இல்லை .