அணைவருக்கும் முந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவு தேவைதானா? என்று கேட்டால் தெரியவில்லை, நேற்றைய சுனாமி எச்சரிக்கையும் இந்த பதிவு எழுத ஒரு காரணமாக அமைந்தது.
அடிக்கடி வரும் பூகம்பம், சுனாமி எச்சரிக்கை, குளோபல் வார்மிங் (Global warming) எனச்
சொல்லப்படும் புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் காரணமா உலக மக்கள் அணைவரும் "உலக அழிவு" பற்றி சிந்திப்பது நியாயமானதே.
எதிர்வரும் 2012.12.21 ஆம் திகதி மு.ப 11:11 அளவில் மாயன் நாள்காட்டி முடிவிற்கு வருகிறது. அப்படியானால் இன்னும் எஞ்சியிருப்பது 253 நாட்கள் மட்டுமே. இதன் காரணமாக மக்களிடம் பல கருத்துக்கள் நிலவி வருகின்றது, அவற்றில் முக்கியமானது
2012-12-21 மு.ப 11 மணி 11 நிமிடம் 11 விநாடியுடன் உலகம் அழிவை
நெருங்குகின்றது என்பதேயாகும்.
மாயன் நாகரீகம் பற்றி பார்ப்போமானால்....
சீன, எகிப்திய, சிந்துவெளி நாகரீகளைப் போல சிறப்பு பெற்ற நாகரீகமே இந்த மாயன் நாகரீகம். இந்நாகரிகம் இப்போதைய மெக்ஸிகோ, ஹொண்டுரஸ் மற்றும் கௌதமாலா
, எல்சல்வடோர் போன்ற நாடுளில் 625 மைல் நிலபப்பரப்பில் மாயர்கள் வாழ்ந்து வந்தததாக ஆய்வாளர்கள் சுட்டிக்
காட்டுகின்றனர். 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில் அழிந்தது.
மாயன் நாகரிக மக்கள் கணிதம்,
சோதிடம், கட்டடக்கலை, நகர நிர்மாணம், நீர் முகாமைத்துவம் மற்றும் வானியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினர்
என்று ஆய்வுகள் சான்று கூறுகின்றன. இவர்களும் எகிப்தியர்களை போலவே சூரியனையே வழிபட்டார்கள். பொருளாதாரம், வணிகம் மற்றும் விவசாய பொருள் உற்பத்தியை அடிப்படைடயாக கொண்டிருந்த இம்மாயன் நாகரீகம் கி.பி 250-900 வரையீலான காலப்பகுதியல் உச்சத்தில் இருந்தது குறிப்படத்தக்கது. இவர்கள் கட்டடங்கள் அமைபப்தற்கு செங்கற்களை பயன்படுத்தியதோடு அவை ஒரே அளவை கொண்டதாகவும் காணப்பட்டது. இவர்களின் சிறந்த கட்டட கலையின் சான்றாக மெக்சிகோ நகரின் சியாபாஸ் ஏன் இடத்தில் மாளிகைகள், கோவில்கள் என பல கட்டடங்களை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட வளத்துடன் ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஆழிந்து போனமைக்கு காரணத்தை அறிஞர்கள் இன்னும் உறுதியாக கூறவில்லை. ஆனாலும் சில காரணங்கள், அண்டை
நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து
அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய
குடியேற்றங்களுடன் வந்த அம்மை போன்ற நோய்கள் பெருவாரியான
மாயன்களை அழித்திருக்கலாம். (ஆனாலும் இன்னும் சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா
போன்ற நாடுகளில் அதிகமானோர் வரிய நிலையில் வசிக்கிறார்கள்.) இப்படிப்
பட்ட சிறந்த நாகரிகமானது விட்டுச் சென்றுள்ள ஒரு விடயம் தற்பொழுது
சர்ச்சைக்குரியதாகவும் மக்களுக்கு பயத்தை உண்டாக்கக் கூடிய ஒன்றாகவும்
உருவெடுத்துள்ளது.
அது தான் மாயன் நாட்காட்டி விவகாரம். இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு நாட்காட்டியினை அவர்களும் வைத்திருந்தனர்.
இந்த நாட்காட்டி கி.மு 313ல் தொடங்கியது. இதன்படி 2012. 12. 21 ம் திகதியுடன் முடிவடைகிறது. அதனால் உலகம் அந்தத் தேதியுடன் முடிவடையும் என்று
அவர்கள்
உணர்ந்து முற்றுப்புள்ளி வைத்ததாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது சூரிய
மண்டலத்திற்கு ஒரு வாரம் என்பது பூமிக்கு 25,625 வருடங்களாம். இதனை
மாயன் காலண்டர் 5 கால கட்டங்களாகப் பிரிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டமும் 5125
வருடங்களைக் கொண்டிருக்கிறது. இதன்படி 4 கால கட்டங்கள் முடிவடைந்து
இப்போது 5வது காலகட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த நாட்காட்டி
21.12.2012ல் முடிவடைகிறது. அதன்படி 21.12.2012ல் உலகம் அழியும் என்று ஒரு
சாரார் நம்புகிறார்கள். ஆனால் 2012 ல் உலகம் அழியும் என்று மாயன் இனம்
எங்கும் சொல்லவில்லை. அவர்கள் தனது இனத்தின்
அழிவைப் பற்றியே கூடச் சொல்லவில்லை என்பதே உண்மையாகும். இயற்கைப் பேரழிவுகளை இதோடு சம்பந்தப்டுத்தக் கூடாது பூமி தோன்றிய நாளிலிருந்து அங்காங்கே இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது.
2012.12.21 பற்றி சிந்திக்க வேண்டிய சில காரணங்கள்
2012 டிசம்பர் 21ம் திகதி சூரியன், பால்வெளி மண்டலத்தின் மத்திய கோட்டை அடைவதுடன் கரும் பள்ளம் என்று அழைக்கப்படும் Dark rift ஐயும் அண்மிக்கிறது இந்த நிகழ்வு 26,000 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதும் ஆச்சரியமாக இருகக்கின்றது. அது மட்டுமன்றி பால்வெளி மண்டலத்தின் மையப் புள்ளியும், சூரியனும், பூமியும், பால்வெளி மண்டலத்தின் மத்திய கோட்டினூடாக, ஒரே நேர்கோட்டில் வரிசையாக வருகின்றன. இந்த ஆச்சரியகரமான நிகழ்வு 21.12.2012 இல் மிகச் சரியாக நடைபெறுவதாக சொல்லப்படுகின்றது. இது எல்லாமே சரியாக நடந்து உலகம் அழியும் என்பது சாத்தியமில்லை என்கிறரர்கள் விஞ்ஞானிகள்.
உலகம் அழியாது...
இந்த பூமி பல கோடி வருஷங்களுக்கு முன்னாடி சூரியன் வெடிச்சி, அதன்மூலம்
சிதறனக் விண்கற்களெல்லாம் கிரங்களாக உருவாகியது. அப்படி உருவாகியதில் ஒன்றுதான் இந்த பூமி.
இந்த பூமி முழுமையாக அழிய வேண்டுமானால் அது சூரியானால் தான் நிகழ வேண்டும்.. இன்னும் 500 கோடி வருடங்களுக்கு அதைப்பற்றி யோசிக்கத் தேவையில்லை.சூரியனால் உயிர் வாழும் இந்த பூமிக்கு இன்னும் ஆயுற்காலம் நிறையவே இருக்கின்றது காரணம் சூரியன் தனது ஐட்ரஜன் எரிவாயுவை பாதியளவு கூட இன்னும் செலவழிக்க வில்லை. இன்னும் 500 கோடி வருடங்களுக்குக தேவையான எரிவாயுவை வைத்திருக்கின்றது. அதன் பிறகு வேண்டுமானால் சூரியனோட எரிபொருள் தீர்ந்து அது பல மடங்கு பெருசாகி அந்த வெப்பம் காரணமாக பூமி அழிந்துவிடும். அதன் பிறகு சூரியனும் நம்ம பூமி அளவுக்கு சுருங்கிடும் வாய்ப்பு இருக்கின்றது. இப்போதைக்கு அதைப்பற்றிய எந்த கற்பனையும் நமக்கு தேவையில்லை.
இப்போதுள்ள பிரச்சினை
மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கை சூழலை பாதுகாக்க தவறி அதை அழித்து வாழ்ந்து வருகிறான். சூழலை பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். நாம் இயற்கை சூழலை பாதுகாத்தால் சூழல் நம்மை பாதுகாக்கும் என்பது மட்டுமே நிச்சயமான உண்மை. நமது கடமையை தவறியதால் தான் ஓசோனில் துளை விழுந்து பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
ஓசோன் படையானது படைமண்டலத்தில் உள்ள பகுதியாகும். இப்பகுதி புவியின்
வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி
புவியின் கடல் மட்ட மேற்பரப்பில் இருந்து 15 - 40 கிலோ மீற்றர் உயரத்தில் நாம் வாழும் இந்தப் பூலோகத்தைச் சுற்றி பரந்து விரிந்து
காணப்படுகிறது. இப்படையானது சூரியனில் புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாப்பு இருந்து வீசப்படும் கவசமாக செயற்படுகின்றது. சூரியனிலிருந்து பூமிநோக்கி வருகின்ற
புறஊதாக் கதிர்களை பூமியின் மீது
விழுவதைத் தடுத்து பாதுகாப்பு கவசமாக இவ் ஓசோன் படை செயற்படுகின்றது.
ஓசோன் படையில் ஓட்டை விழுந்திருக்கின்ற சங்கதியை விஞ்ஞானிகள் 1980ம் ஆண்டு காலப்
பகுதியில் அவதானித்தனர். அன்டாட்டிக்கா எனப்படுகின்ற தென்துருவப் பகுதியில் ஓசோன்
படையில் சுமார் 230 இலட்சம் சதுரமைல் பரப்புடன் கூடிய ஓட்டை விழுந்திருப்பது
அவதானிக்கப்பட்டது.
ஓசோன் தேய்விற்கு ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances)
காரணங்களாக உள்ளன. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே
உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள்
எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இயற்கைச் சூழலை பாதுகாப்பது நமது கடமை மட்டுமன்றி அதுதான் நம் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் பெரும் செல்வமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக