புதன், 11 ஏப்ரல், 2012

சுனாமி

சுமாத்திரா தீவில் ஏற்பட்ட 8.7 ரிச்டர் நில அதிர்வை அடுத்து இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கப் பட்டுள்ளார்கள். இலங்கைகயில் கிழக்கு தெற்கு மற்றும் யாழ்ப்பாணம், பகுதிகளில் கரையோரத்தில் உள்ளவர்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.

 இந்தோனேஷியாவில் பயங்கர நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக இலங்கையில் சுனாமி வர வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக வானிலை துறை அறிவித்துள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 8.7 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.இலங்கையில் இந்த ஆழிப்பேரலை நிலை மாலை 4 மணியளவில் ஏற்படலாம் என்றும் வானிலை அவதான மையம் அறிவித்துள்ள போதிலும் (இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை). இதேவேளை இந்த புவியதிர்வை அடுத்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியதிர்வு அளவு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையீல் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி வருகின்றமை குறிபிடத்ததக்கது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாடுகள்
INDONESIA / INDIA / AUSTRALIA / SRI LANKA /MYANMAR / THAILAND / MALDIVES / 
UNITED KINGDOM /MALAYSIA / MAURITIUS / REUNION /SEYCHELLES / OMAN / PAKISTAN / 
SOMALIA /MADAGASCAR / IRAN / UAE / YEMEN / COMORES /MOZAMBIQUE / KENYA / 
TANZANIA / CROZET ISLANDS /BANGLADESH / KERGUELEN ISLANDS / SOUTH AFRICA /
SINGAPORE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக