சனி, 21 ஏப்ரல், 2012

அக்னி 5


கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து தாக்கும் அதி நவீன அக்னி -5 ஏவுகணை 19-04-2012 (வியாழன்) காலை 8.07 மணிக்கு, ஒடிசா மாநிலம், வீலர் தீவில் இருந்து,  வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையின் வெற்றியை இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். புதன் கிழமை (18-04-2012) இரவு 8.30 மணியளவில் அக்னி ஏவுகணை சோதித்துப்பார்க்கப்படுவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த சோதனை ஆடுத்த நாள்  நடத்தப்பட்டது. 

  
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில்,சீறிப்பாய்ந்த ஏவுகணை, முன் கூட்டியே திட்டமிடப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது.

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீற்றர் அகலம் 2 மீற்றர் ஆகும். 5,000 கிலோமீற்றர் தூரம் வரை இது தாக்கக் கூடியது. ஒரு டன்னுக்கும் மேற்பட்ட  எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது.


Inter-Continental Ballistic Missile-I CBM எனப்படும் மூன்று பாகங்களைக் கொண்ட இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் பகுதி ராக்கெட் தனியே கழன்றுவிடும். 

அடுத்து இரண்டாவது ராக்கெட் செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இதன் பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு, அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும். இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

3வது கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்.

உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய  நாடுகள் மட்டும் தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருந்தன (இப்போது இந்தியா வும்)  என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை 5,000 கி.மீ தாக்கக் கூடியது என்று இந்தியா சொன்னாலும் இது 8,000 கி.மீ வரை சென்று தாக்கக்கூடியது என்கிறது சீனா. இந்தியாவில் இருந்தவாரே சீனா மற்றுமனறி இந்தியாவை சுற்றியுள்ள ஏனைய பல நாடுகளையும் என்பதுதான் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது.

இதன் வேகத்தைப் பார்த்தால், ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும் போர் விமானத்தை விட 30 மடங்கு வேகத்திலும் சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் வல்லமை உடையது.அக்னி-5 ஏவுகணையை மேலும் கூர்மையாக்க மேலும் 5 முதல் 6 சோதனைகள் வரை தேவைப்படும் என்று தெரிகிறது. 

இதுவரை பொருளாதார மற்றும் ஆயுத பலத்தில் இந்தியா 5 வது இடத்திலும் இராணுவ பலத்தில் 3வது இருக்கின்றது.

கண்டம் விட்டு கண்டம் போய் தாக்கும் அதி நவீன ஏவுகணைகள் மற்றும் அந்நாடுகளின்  இராணுவ வீரர்கள் எண்ணிக்கைகளை  பார்த்தால்,

அமெரிக்கா
வீரர்கள் 1,569,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 450

சீனா
வீரர்கள் 2,285,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 66

இந்தியா
வீரர்கள் 1,325,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 01

ரஷ்யா
வீரர்கள் 956,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 292

இங்கிலாந்து
வீரர்கள் 174,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 00





வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஆறு கால்களுடன் பிறந்த குழந்தை


பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்ததில் உள்ள சுக்கூரைச் சேர்ந்த 31 வயதான இம்ரான் அலி ஷேக் மற்றும் 27 வயதான அவரது தனைவி அப்ஷான் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இம்மாதம் 12ம் திகதி அறுவை சிகிச்சை மூலம் அப்சராவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் அக்குழந்தையின் உடலில் 6 கால்கள் இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.


எக்ஸ்ரே டெக்னீஷியனாக தொழில் புரியும் இம்ரானுக்கு குழந்தை சிகிச்சைக்காக செலவிட முடியாத நிலையில் சிந்த் மாகாண ஆளுனர் செலவை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து குழந்தை கராச்சியில் உள்ள தேசியக் குழந்தைகள் சுகாதார நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு ஐசியுவில் வைக்கப்பட்டது.


தற்போது பிறந்துள்ள குழந்தையுடன் பிறந்த மற்றுமொறு குழந்தை வளர்ச்சியடையாததால் அதன் உடல் பாகங்களும் சேர்த்து இக்குழந்தைகப்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஐந்து பேர் கொண்ட விஷேட மருத்துவ குழுவினரால் இந்த குழந்தையின் உடம்பில் உள்ள மேலதிக 4 கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார்கள். பாகிஸ்தானில் இப்படி ஒரு குழந்தை பிறந்தது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





  

 

 

வியாழன், 19 ஏப்ரல், 2012

சூரிய ஒளிக்கற்றைகள்

சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது. சூரியனின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியாகிய ஒளிக்கற்றைகளே இவ்வாறு படம் பிடிக்கப்பட்டுள்ளன.



நாசாவின் செயற்கைக்கோள் ஒன்றே இதனை படம்பிடித்துள்ளது.
இதுகுறித்து பெர்னார்டு என்பவர் கூறுகையில், விண்வெளியில் கதிர்வீச்சு என்பது மக்களுக்கும், நுண்ணிய மின்னணு அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.



இவ்வாறான பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எங்களது ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.













கானொலி ஒன்று






புதன், 18 ஏப்ரல், 2012

சூரியன்

 இவ்வுலகில் அனைத்து ஆற்றல்களுக்கும்  மூல காரணமாக விளங்குவது சூரியனே ஆகும். அதனால் இன்று சூரியனைப் பற்றி முடிந்தளவு எழுதப் போகிறேன்.
 
சூரியன் என்பது மிகப்பெரிய நட்சத்திரமாகும்..

சூரியனின் ஈர்ப்பு விசையாலேயே பூமி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளம் தான் நம் சூரியன். மேற் புற வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ், மையப் பகுதியின் வெப்பநிலை 15,000,000 டிகிரி செல்சியஸ் ஆகும். வயது 500 கோடி ஆண்டுகள், இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிச்சயமாக உயிர் வாழும் தகுதி உடையது (சூரியனை நடுவயதுடைய நட்சத்திரம் என்றும் அழைக்கப்டுகிறது) 9.8 கோடி மைல் தூரத்தில் இருக்கின்றது. பூமியிலிருந்து 1000 கி.மீ வேகத்தில் பறந்தால்  கூட சூரியனை சென்றடைய 12 வருடங்களாவது ஆகும். (சூரியனில் 92%  ஹைட்ரஜனம், 7.8% ஹீலியமும், 0.2% இதர வாயுக்களும் உள்ளன) சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். 

சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது 5,88,00,00,000 மைல்கள். இந்த அண்டத்தின் மையத்தைப் பற்றிக் கொண்டு வினாடிக்கு 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒரு முறை சுற்றி வரச் சூரியனுக்கு சுமார் 225 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. இத்துடன் சூரியன் தனது அச்சைப் பற்றிக் கொண்டு ஒருமுறை சூழலத் துருவத்தில் 24 முதல் 25 நாட்களும், மைத்தில் 34 முதல் 37 நாட்களும் ஆகின்றது.

nuclear fusion எனப்படும் அணு இணைவு வினை நான்கு ஹைட்ரோஜென் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவாக மாறுவதால் வெ ப்பம் வெளியேற்றப்படுகின்றது. 



செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இந்தியப் பாராளுமன்றக்குழுவின் இலங்கை வருகை

தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே இலங்கை வரும் "இந்தியப் பாராளுமன்றக் குழு" என குற்றம் சாட்டியுள்ளது நவசமசமாஜக்கட்சி  தெரிவித்துள்ளது.


இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது.



இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை சமாதானபடுத்தவே இக்குழு இங்கு வருகிறது. இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக் குழுவின் திட்டமாகும். தமிழ் மக்களை வாழ வைப்பதற்கு அல்ல அம்மக்களை அடக்கியாள்வதே இவ் விஜயத்தின் இலக்காகும்.





தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தை பாதுகாக்கும் இந்தியக் குழுவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரதிநிதி வாபஸ் பெறப்பட்டமை வரவேற்புக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் உணர்வுகளை தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்தியமையே இதற்கு காரணமாகும்.

இக்குழுவின் விஜயத்தால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை.மாறாக அம் மக்களின் வளங்கள் சூறையாடப்படவுள்ளதென்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். இவையாவும் உண்மை என்பது போலவே இக்குழுவின் நிகழ்ச்சி நிரலும் அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குழு போவதாகத் தெரியவில்லை.  முள்வேலி முகாமில் இன்னும் கூட அடைபட்டிருக்கும் தமிழர்களையும் இவர்கள் பார்ப்பதாக நிகழ்ச்சி நிரலில் இல்லை. போர் நடந்த பகுதிகளுக்கும் இவர்கள் போவதாகவும் தெரியவில்லை.

இந்நிலையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன், இலங்கை புறப்படுவதற்கு முன்னர் நிருபர்களிடம் பேசியபோது , இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சென்று, அவர்களின் உண்மை நிலை மற்றும் வாழ்வாதாரங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழு நேற்றிரவு (திங்கட்கிழமை) இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்தது.

 இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இத்தூதுக்குழுவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 புதுடில்லியிலிருந்து விசேட விமானம் மூலம் புறப்பட்ட இத்தூதுக்குழுவினர் நேற்றிரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்தடைந்தனர். இக்குழுவில் திமுக இடம்பெறாதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இத் தூதுக்குழுவினரை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோர் வரவேற்றனர்.


 

ஹிட்லர்

பிந்திய புதுவருட வாழ்த்துக்களுடன் இதற்கு முதல் பதிவில் உலக அழவு பற்றியும் இந்த பதிவில் 20ம் நூற்றாண்டில் அதிக மனிதர்களை அழித்த அடால்ஃப் ஹிட்லர் பற்றியும் எழுதப் போகிறேன். இதே 20ம் நூற்றாண்டுதான் நமக்கு "அஹிம்சை" என்றவும் உடனே ஞாபகத்துக்கு வரும் மகாத்மா காந்தியையும் தந்தது.


வட ஆஸ்திரியாவின் பிரானவ் என்ற ஊரிர் 1889 ஏப்ரல் 20ஆம் திகதி ஹிட்லர் பிறந்தார். சுங்க இலாகா அதிகாரியாக இருந்த அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர் என்பவரின் மூன்றாம் மனைவி கிளாராவின் ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாகவே அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா இட்லர் மட்டும்தான். 
பிறந்தது முதல் ஹிட்லர் நோயாளியாகவே இருந்தார்.  அடிக்கடி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகேக உடல் தேறியது. பள்ளியில் படிக்கும் போது ஹிட்லர் வகுப்பில் முதல் மாணவராகத்  திகழ்ந்த போதிலும் பின்னர் படிப்பில் ஆர்வம் குறைந்தது. ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். போர் பற்றிய கதைகள் படிப்பதில் அதிக ஆவல் கொண்டிருந்தார். 
இவரும் இவரைவிட ஏழு வயது சிறியவரான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் இட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு இவரும் தாயாரும் ஆளாக்கப்பட்டனர். தன் தந்தை எப்படி தன்னையும் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புருவதை கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார். அதே சமயம் அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார். பொருளாதார சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது.  
ஜனவரி 3, 1903 ல் அவருடைய தந்தை இறந்து போனார் இப்போது ஹிட்லருக்கு 14 வயதுதான் ஆகியிருந்தது. தந்தையின் பாதுகாப்பு, அரவணைப்பு இன்மை காணமாக ஹிட்லர் நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களிடமும் சண்டை பிடித்தார். இதே பள்ளியில்தான் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலாக லுட்வக் விட்ஜென்ஸ்டின்  (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவ்வியலாளர்) படித்தார் என்பதும் பபகுறிப்பிடத்ததக்கது. இருவரும் ஓருவரையொருவர் சந்தித்ததேயில்லை.
ஹிட்லர் தனது 17வது வயதில் பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். இதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக் கொண்டு வரும் வழியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதுடன்  சான்றிதழையும் கிழித் தெறிந்தார். இதற்காக பபாடசாலையில் கண்டிக்ப்பட்டார். அப்போது 'இனி என் வாழ் நாளில் சிகரெட்டையும் மதுவையும் தொடமாட்டேன்' என்று சபதம் செய்தது சாதாரணமாக இருந்தாலும் மரணிக்கும் வரை அதை கடை பிடித்தது ஆச்சரியமானது, ஒரு சிலருக்கு அது உமாரணமும் கூட.... அத்தோடு டிப்ளோமா கூட பெறாத நிலையில் படிப்பையும் நிறுத்திக்கொண்டார்.


வெறும் ஹிட்லராக இருந்தவருக்கு அடால்ப் என்ற பெயர் வந்ததன் காரணம்
அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். 1920 களில் அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.


1907 ம் ஆண்டு ஓவியக் கல்லூரியில் சேர முயற்சித்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை, அந்த ஆண்டின் இறுதியில் தாயாரும் இறந்து போனார். அதன் பிறகு ஓவியங்கள் வரைந்தே வாழ்க்கை நடத்தினார்.  ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் அதிக விலைக்கு விற்பனையாகியது, அதனால் சொந்தமாக ஓவியக்கூடமும் அமைத்தார். அந்த நேரத்தில் ஒரு பெண்ணை காதலித்தார். அதில் தோல்வியடையவே இராணுவத்தில் சேர்ந்ததார்.


முதலாம் உலகப்போரில் ஜேர்மனி இராணுவத்தில் ஒரு படைவீரராக பணியாற்றினார். போரில் ஜேர்மன் தோற்றத்திற்கு ஜனநாயக வாதிகளும் யூதர்களும் தான் காரணமென ஹிட்லர் நினைத்தார். 'உலகில் ஜேர்மனியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்' என விரும்பினார். பேச்சுவன்மை மிக்க ஹிட்லர் 'தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி'யில் இணைந்து மிக விரைவில் கட்சித் தலைவரானார். அரசாங்கத்திற்கெதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற போதிலும் அதில் தோல்வி கண்டு சிறை சென்றார். சிறையில் இருந்த போது 'என் போராட்டம்' எனும் பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.


914 ஒய்பெர்ஸ் (Ypers) சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் ஹிட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் இட்லர் விமர்சித்து பேசப்பட்டார் ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை இட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார்.

15 அக்டோபர் 1918 இட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.அந்த சந்தர்ப்பத்திலும் யூதர்களை அழிப்பதிலேயே கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. (1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை.)  அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின. பிறப்பால் ஆஸ்டிரியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1918 இல் ஜேர்மனி தோற்றது. இத் தோல்விக்கு ஜனநாயகவாதிகளும் யூதர்களும் தான் காரணம் என்று ஹிடலர் நினைத்தார்.உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தவர்.உலகம் முழுவதையும் ஜேர்மனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என விரும்பினார்.ஹிட்லர் பேச்சு வல்லமை மிக்கவர்.தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்ந்து தனது பேச்சு வல்லமையால் விரைவிலே கட்சித் தலைவரானார்.

அரசாங்கத்தின் நிர்வாக திறமை இன்மையால் தான் நாட்டில் வறுமை வேலையின்மை பெருகிவிட்டதாக பிரச்சாரம் செய்தார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.அரசாங்கம் அவரை கைது செய்து 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பின்பு அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது.சிறையிலிருந்த போது "எனது போராட்டம்"என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.

1928 இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது.ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.தன்னுடைய கட்சியின் பெயரை "நாசி"கட்சி என்று மாற்றி நாடுமுழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார்.
இவருடைய இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் இராஜ தந்திரமும் வெற்றி பெற்றன.ஆட்சிக்கு எதிராக மக்ககள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்ற கட்டடம் கொளுத்தப்பட்டது.ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார்.1933 ஜனவரி 30 ஆம் திகதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார்.


அதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜேர்மனின் சர்வாதிகாரியானார்.பாராளுமன்றத்தை கலைத்தார்,இராணுவ திணைக்களத்தினையும்,இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார்.அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார்.இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.

யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என முடிவு செய்து ஒரு பாவமும் அறியாத யூதர்களை கைது செய்து சிறையில் பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொன்றான்.தினமும் சராசரியாக 6000 - 10000 பேர் வரை விஷப் புகையிட்டு கொல்லப்பட்டனர்.ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம் ஆகும்.1939 அல்பேனியா,செக்கொச்லோவக்கியா ஆகிய நாடுகளை கைப்பற்றிக்கொண்டு போலந்து நாட்டின் மீது படைஎடுத்தான்.

இதனால் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தது.ஆனால் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது.ஜேர்மனி தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து தங்கியிருந்தார்.இச் சுரங்கத்தில் தான் ஹிட்லரின் அலுவலகமும் படுக்கை அறையும் இருந்தது.ஹிட்லரின் அறை 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது.1945 ஏப்ரலின் பின் பெர்லின் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசின.ஹிட்லர் தங்கியிருந்த பாதாள சுரங்கத்தின் அருகிலும் குண்டுகள் விழுந்தன.ஈவா பிரவுன் என்ற பெண் 1930 ஆம் ஆண்டு முதல் ஹிட்லர் உடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தார்.

ஹிட்லர் இறப்பதுக்கு முன் எழுதிய மரண சாசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

  • நாங்கள் இறந்த பிறகு எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டு வந்தேனோ இந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும் ஈவாவையும் உடனே எரித்து விட வேண்டும்.
  • என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு பிறகு என் கட்சிக்கு சேர வேண்டும்.கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கு சேர வேண்டும்.
  • ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும் பாசமும்தான் என்னை வழிநடத்தின .கடந்த 30 ஆண்டுகளாக என் சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காக செலவிட்டிருக்கிறேன் .
  • இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.ஏனென்றால் போர் வெறி கூடாது .ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும்,என்று நானே வலிறுத்தி இருக்கிறேன்.
  • முதல் உலகப்போருக்கு பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை .எப்படியோ போர் மூண்டுவிட்டது.
  • இந்தப்போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள்,நாசமாக்கப்பட பிரம்மாண்டமான மாளிகைகள்,தரைமட்டமாக்கப்பட்ட கலையம்சம் மிக்க நினைவுச்சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.
  • இந்த போருக்கு காரணமானவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜேர்மனிய இளைஞனுக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்ப்படும்.

30 ஆம் திகதி இரவு 9 மணி "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வதிகாரி முசோலினியும் அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர் ".என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது.
ரேடியோ செய்தியை ஹிட்லர் நேரடியாக கேட்டார் .முசோலினியின் முடிவு,ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது .அன்றிரவு 12 மணி பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும் எந்த நேரத்திலும் ,சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும் ,ஹிட்லருக்கு தகவல் கிடைத்தது.

ஹிட்லரின் முகம் இருண்டது .மவுனமாக எழுந்து ,தன் தோழர்களுடன் கை குலுக்கினார் .பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து ,"நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம்.நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி ,பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள்.எங்கள் அறையில் உள்ள கடிதங்கள்,டைரிகள்,என் உடைகள் என் பேனா,கண்ணாடி முதலிய பொருட்களை சேகரித்து ,ஒன்று விடாமல் எரித்து விடுங்கள்"என்று கூறிவிட்டு தன் மனைவியையும் அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றார்.

அறைக்கதவு சாத்தப்பட்டது .வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.ஹிட்லரும், ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும் ,தளபதிகளும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் .

ஒரு சோபாவில் உட்காந்திருந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல் . அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது.அவர் சற்றுநேரத்துக்கு முன்னர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதால் துப்பாக்கி நுனியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.அவரின் வலது காதுக்கு கீழிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டுஇருந்தது.ஹிட்லரின் வலது கரம ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது.அது ஹிட்லரின் தாயாரின் புகைப்படம்.
அவருடைய மனைவி ஈவா வெள்ளைப்புள்ளிகளோடு கூடிய கருநீல மாக்சி உடை அணிந்து இருந்தால்.அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது.எனவே அவள் சைனட் விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.இருவரது உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள்.பின்னர் அந்த உடல்களை தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிகொண்டு போய் எரித்தார்கள்.