சனி, 23 ஜூன், 2012

இடி அமீன்


ஏற்கனவே சர்வாதிகாரி ஹிட்லர் பற்றி எழுதியிருக்கிறேன். இன்று இடி அமீன் பற்றி எழுதப்போகிறேன். இடி அமீனின் சர்வாதிகாரத்தை பார்கக்கும் போது ஹிட்லர் பரவாயில்லை என்று தோன்றுகிறது. நீர்யானையின் கல்லீரலிலிந்து மனித மாமிசம் வரை இவன் ருசித்திருக்கின்றான் என்று இவருடன் நெருங்கிப் பழகிய அதிகாரிகள் மூலம் தெரியவந்துள்ளது. இரக்கம் என்ற வார்த்தைக்கும் இவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 
இடி அமீன் உலகின் அதி பயங்கர கொடுங்கோலரின் ஒருவன். அமீன் பிறந்த ஆண்டு சம்பந்தமாக சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924, 1925 இல் அல்லது மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்று தெரிகிறது.


தாயால் வளர்க்கப்பட்ட இவன் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த விவசாயியின் மகன் ஆரம்ப கல்வி மட்டுமே பயின்ற இவன்  1946 இல்  சமையல் காரனாக ரானுவத்தில் சேர்ந்து  பின்னர் படிப்படியாக லெப்டினன்ட் ஆக பதவி பெற்றான்.
 
உகண்டா நாடு மற்றும் அரசியல் பற்றி பார்தத்தால், ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa) என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்நாடு ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது. 1962 இல் உகண்டா ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுகந்திரம் பெற்றது. அதே ஆண்டு நடந்த பொது தேர்தலில் வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மில்டன் ஒபோடே வெற்றி பெற்று பிரதமரானார்.  இவர் ஒபோடே லாங்கி பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். இவர் ஆட்சிக்கு வரும் போது அந்நாட்டு மக்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்களாக பிரிந்து வாழ்ந்தனர். அவ்வினங்களுக்கென்று தனி தலைவர்களும் இருந்தனர் ஜாதி தலைவர்கள் போன்று. இந்நிலையில் புகாண்டா என்னும்  பழங்குடியின் தலைவரான கிங் பிரெடி என்பவரை உகாண்டாவுக்கு ஜனாதிபதியாக்கினார்.

ஒபோடே மற்றும் பிரெடி இருவருக்குமான நட்பு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இருவருக்கும் கருத்து முரன்பாடுகள் ஏற்பட ஒபோடே ஜனாதிபதி அதிகாரங்ளை பிரெடியிடமிருந்து பறிக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த புகண்டா இனத்தவர்கள் களவரதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதிகமாக வாழ்ந்த அவ்வின மக்களை அடக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட முரட்டுத்தனமான இராணுவ அதிகாரியே இடி அமீன். காக்வா இனத்தைச் சேர்ந்த இவன் பார்ப்பதற்கே பங்கரமாக இருப்பான் ஆறு அடிக்கு மேல் உயரம். குத்துச்சண்டை சாம்பியன் முரட்டு குணம் கொண்டவன்.
1966 இல் இடி அமின் மேஜர் ஜெனரல் ஆக ஒபோடே அசால் நியமிக்கப்பட்டான் அமீன் முதல் வேலையாக ஜனாதிபதி மாளிகையை பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தினான். இதனால் பீதியடைந்த ஜனாதிபதி நாட்டை வீட்டே பிரிட்டனுக்கு ஓடினார். பின்னர் ஒபோடேவுடன் சேர்ந்து உகண்டாவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லத் தொடங்கினான். இதற்கிடையே பிரிட்டனில் தஞ்சம் புகுந்த  ஜனாதிபதி நோயுற்று இறந்து போனார்.
ஜனவரி 1971 அன்று ஒபோடே காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூருக்கு விமானத்தில் பறந்தார். அவரிடம் பணிவோடு கைகுலுக்கி வழியனுப்பிய இடிஅமின், விமானம் கிளம்பியவுடன் ராணுவத்தின் ஒரு பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றி தான் நாட்டின் சர்வாதிகாரி என அறிவித்தான்.  சர்வாதிகாரியான அமீன் வெள்ளையர்களை தனது பல்லாக்கு சுமக்கும்  சிப்பந்திகளாகவும் குடை பிடிக்கவும் பயன்படுத்தி கொண்டதால் நாட்டு மக்களிடையே அமீனுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. 


ஆனால் அமீனுக்கு ஒரு பயம் இருந்தது. தான் இரானுவ அதிகாரியாக இருந்து ஆட்சியை கவிழ்த்து போல் தனக்கும் இது போல நடந்து விட்டால் என்னவாகும் என்று யோசித்த அமீன் அந்நாட்டின் முக்கிய உயர் இரானுவ அதிகாரிகளை இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்தான் இவ்விருந்தில் 36 பேர்வரை கலந்து கொண்டனர். அணைவரையும் திட்டமிட்டது போல் தனது அடியாட்களை வைத்து கொலை செய்தான். மறு நாள் தன்னை கொலை செய்ய சதி திட்டத்துடன் வந்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி ஏற்பட்டது என்று வானொலி மூலம் அறிக்கை விடுத்தான். 

நீதி கெட்டு வந்த ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சுலைமான் ஹுசைன் அவர்களையும் கொலை செய்து அவரது தலையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து உள்நாட்டு, அயல் நாட்டு பிரமுகர்களை அழைத்த விருந்தொன்றில் சுலைமானின் தலையை எடுத்து ஊறுகாயுடன் சேர்த்து ருசித்ததாகவும் தகவலொன்று கூறுகின்றது.

எழுதப்படிக்ககூடத் தெரியாத இடி அமீனுக்கு நாட்டின் தலை எழுத்து தனது கையில் இருந்ததால்,  நாட்டின் உயரிய  பட்டங்களை எல்லாம் அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். தனது  மார்பே மறைக்கும் அளவுக்கு ராணுவத்தின் எத்தனை பதக்கங்கள் உண்டோ அத்தனையும் எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்டான்.


இவன் செய்த கொலைகளும் தேசதுரோக செயல்களும் மக்களுக்கு தெரியாமல் போனமைக்கான முக்கிய காரணம் அந்த நேரத்தில் ஊடகங்கள் அதிகளவில் இல்லாமையே, இருந்த வானொலியும் அமீனின் கையில் என்பதால் உண்மைகள் மறைக்கப்ட்டன. ஆனாலும் உண்மைகள் கசிய ஆரம்பித்தது அதன் பிறது அமெரிக்க பத்திரிக்கை ஒன்றின் நிருபரான நிகோலஸ் ஸ்ட்ரோ என்பவரும் ராபர்ட் ஸைடில் என்கிற சமூகவியல் பேராசிரியரும் உகாண்டாவில் ராணுவ  கமாண்டரான மேஜர் ஜூமோ அய்கா என்பவனை சந்தித்து, இதுபற்றி விசாரிக்க போன போது அவர்களையும் அமீனின் ஆணைப்படி கொலை செய்தான் அய்கா. அத்தோடு உகண்டாவின் பொருளாதாரமும் மந்தகதியாகி அடிமட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. உதவி செய்யவும் எந்த நாடும் முன்வரவில்லை.

உகாண்டாவில் 50,000 க்கும் அதிகமாக ஆசிய மக்கள் வசித்து வந்தார்கள். இவர்களில் தொழிலதிபர்களாகவும் உயரிய பதவிகனையும் வகித்து, உகாண்டாவின் பொருளாதாரத்தையும் தூக்கி பிடித்து நிறுத்தினார்கள். ஆசிய தொழிலதிபர்களால் லட்சக்கணக்கான உகாண்டா மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது. இவர்கள் அணைவரையும் 90 நாட்களில் தனது நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிட்டான்.  பல தலைமுறைகளாக உகாண்டாவிலேயே பிறந்து, வளர்ந்த அணைவரும் கையில் மூட்டை முடிச்சிகளுடன்  நாட்டைவிட்டு வெளியேறின.
உகாண்டா அரசுக்கு லிபியா நாடு மட்டுமே எதோ நிதியுதவி அளித்து வந்தது. லிபியாவின் ஒரே கண்டிஷன் - யூதர்கள் அத்தனை பேரையும் நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் என்பதே அந்த கண்டிஷன். 1976 ஜூன் 28 ஆம் திகதி இஸ்ரேலிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை பாலஸ்தினிய தீவிரவாதிகள் கடத்தி, உகாண்டாவில் இறங்கினார்கள். விமானத்தில் அதிகமான யூதர்கள்.

ஜூலை 3 ஆம் தேதி நள்ளிரவு இஸ்ரேலிய கமாண்டோக்களைச் சுமந்துக்கொண்டு ஒரு ராணுவ விமானம் வந்து  இறங்கியது. விமானத்திலிருந்து பாய்ந்த கமாண்டோக்கள் விமான நிலையத்தில் புகுந்து, அத்தனை பயணிகளையும் காப்பாற்றி, தங்கள் விமானத்தில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டார்கள் குறுக்கே வந்த அமீனின்  ராணுவ வீரர்கள் அணைவரையும் சுட்டுத்தள்ளினார்கள். ஒரு மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.
1978 இல் உள்நாட்டு கலகங்களும் பொருளாதார பிரச்சனைகளும் உகண்டாவில் தலைவிரித்தாடத் தொடங்கியது அதனை மூடி மறைக்க அண்டை நாடான தான்சானியாவை போருக்கு அழைத்தான். ஆத்திரமடைந்த தான்சானியா மற்றும் உள்நாட்டு படைகள் எதிர்த்து தாக்கின பயிற்சியில்லாத அமீனின் இராணுவ வீரர்கள் சமாளிக்க முடியாமல் இறந்து போனார்கள்.
இடி அமின் லிபியாவில் தஞ்சம் புகுந்தான் பின்னர் அங்கேயும் எதிர்ப்பு அதிகரிக்கவே சில காலம் ஈராக்கில் வாழ்ந்தான் அவனுக்கு ஏறக்குறைய 40 பிள்ளைகளும் 8 மனைவிக்கு மேல் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இறுதிக்காலகட்டத்தில் 16 ஆகஸ்ட் 2003 அன்று மாரடைப்பால் இறந்து போனான். இடி அமின் இறந்த சில மணி நேரங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் புதைக்கப்பட்டான். மீண்டும் ஒபோடே ஆட்சி துவங்கியது.
அமீனின் ஆட்சியில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.

மனிதனாக பிறந்து மிருகமாக வாழ்ந்து மிருகமாகவே இறந்தான்.


புதன், 20 ஜூன், 2012

கார்ல் மார்க்ஸ்


காலம் எப்படி கி.மு- கி.பி என்று பிரிக்கப்படுகின்றதோ அதே போல் மனித வரலாற்றையும் மா.மு - மா.பி என்று பிரிக்கும் அனவிற்கு அவருடைய சிந்தனைகளும் கோட்பாடுகளும் அமைந்திருக்கின்றது.  

"உலகத் தொழிலளர்க்ளே ஒன்று படுங்கள் உங்க்களிடம் இழப்பத்ற்கு ஒன்றும் இல்லை பெறுவதற்கு ஒரு புதிய பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது" என்ற துவக்கத்துடன் தன்னுடைய பொதுவுடமை அறிக்கையை வெளியிட்டவர் கார்ல் மார்க்ஸ். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக பொதுவுடமையின் முக்கிய மூலவேராக இருந்தவர் கார்ல் மார்கஸ் .உலகின் மக்கள் தொகையின் பெரும் பகுதி மக்களின் தலை விதியை உன்னதமான முறையில் மாற்றி அமைத்தவர் . அவருடைய கொள்கையை உலக மக்கள் தொகையில் அதிகமானவர்கள் (சராசரியாக 130 கோடி என்று தெரிகிறது) பின்பற்றுகிறார்கள். வேறு எந்த கொள்கைகளையும் இவ்வளவு பேர் பினபற்றவில்லை.


கார்ல் மார்க்ஸ் உருவாக்க  முயன்ற சர்வதேச தொழிலாளர் மாநாடு 1889  ஜூலை 14 அன்று பரிசில் (ஃபிரான்ஸ்) நடைபெற்றது. பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உள்ளிட்ட பல தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் கார்ல் மார்க்ஸ் சொன்ன எந்த தொழிலாளர் ஆகினும் 8 மணிநேர உழைப்பு என்ற கொள்கையை உலகமயமாக்குவதாக தீர்மானிக்கப்பட்டது அதே கூட்டத்தில் மே முதல் திகதியை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் தத்தமது இயக்கங்களை நடத்திட, கொண்டாட ஒரு தினமாக தெரிவு செய்தார்கள்.அதுதான் மே தினம் 


கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx) பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ள ரைன்  நதிக்கரையின் அருகில் இருக்ம் ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதியில் உள்ள வீட்டில் 05-05-1818 ம் ஆண்டு பிறந்தார். தாய் ஹென்ரிட்டா, தந்தை ஹெர்ஷல் மார்க்ஸ் சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர். உடன் பிறந்தவர்கள் 8 பேர். மார்க்ஸ் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஜெர்மனியில்தான் (சொந்த நாடு பிரெஞ்சு) 12 வயதில் படிக்க ஆரம்பித்த இவர்  பான் பல்கலைக்கழகத்தில் வக்கில் படிப்பை (தந்தையின் விருப்பத்திற்காக) 25-08-1835 தந்தையால் முடித்துக்கொண்டார்.

கார்ல் மார்கஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமை வகுத்தவர்களுள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார்.

ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜென்னியின் (காதலி) தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது. ஜென்னி எனும் மிக அழகான படித்த பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையை முறையாக அமைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணினார். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம். 

பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

இதற்கிடையில் தனது காதலியான ஜென்னியை  1843ம் ஆண்டு ஜூன் 19ம் நாள் மணம் செய்து கொண்டார். ஜெனியை 17  ஆவது வயதில் காதலிக்க தொடங்கி 29 ஆவது வயதில் திருமணம் செய்தார் .

தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”.  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் அக்கட்டுரையின் கருவாக அமைந்தது. பிறகு ஜெர்மன் அரசால் அப்பத்திரிக்கை தடைசெய்யப்பட்டது. மார்க்சை நாடு கடத்தவும் அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டது. ஆனால் மார்க்ஸ் மன்னிப்பு கேட்டால் ஒரு வாய்ப்பு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியத்தில் குடியேறினார். 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து அந்நாடே பயந்து “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது. 


பிறகு மார்க்ஸ், நெசவுத் தொழில் அதிபரின் மகனான ஏங்கல்ஸ் உடன் சேர்ந்து  “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிராக “பொதுவுடமைச் சங்கம்”. உருவாக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர். இவர்கள் இருவரின் புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்சும் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்த காலத்தில் தனது உடைகளை அடகு வைக்கும் அளவிற்கு வறுமைப்பட்டார். ஒருமுறை வீட்டை விட்டு விரட்டப்பட்டார்.
தனது ஒரே ஒரு மகள் இறந்ததும் தன் நண்பருக்கு மீண்டும் கடிதம் எழுதினர் "இந்நாட்களில் நான் அனுபவித்த மிகையான துன்பங்களுக்கு இடையேயும் உன் நட்பும் நாம் இவ்வுலகத்திற்கு செய்ய வேண்டிய அறிவார்ந்த பணியும் இருக்கிறது என்ற நம்பிக்கையுமே என்னை நிமிர்த்தி வைத்துள்ளது" என்று எழுதினார் நியூ யார்க் டெய்லி பத்திரிக்கைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார் ஆனால் போதிய பலனளிக்கவில்லை. தனது மகள் இறந்த  சமயத்தில் ஜெனி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது தொட்டில் இல்லை. இறக்கும் போது சவப்பெட்டி கூட இல்லை”
1881ம் அண்டு,  டிசம்பர் மாதத்தில், மார்க்சின் காதல் மனைவி இறந்தார். ஜெனியின் இழப்பு மார்க்சை பெரிதும் வாட்டியது. இதன்பின்  15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி  1883 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி இலண்டனில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி இறந்தார். இறக்கும் போது 61வது வயது. இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) , The philosophers have only interpreted the world in various ways - the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சியினர் மார்க்சின் கல்லறையை அமைத்தனர். 
மார்க்ஸ் எழுதிய மூலதனம் ( DAS KAPITAL) என்ற நூலின் பாதிப்பு இன்றளவும் இருக்கின்றது. அந்நூல் பற்றி குறிப்பிடுவதானால், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வு கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியளாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்நூலில் கூறப்படுவது  நமக்கு ஒரு பொருள் தேவைப்பட்டால் அதை நாம் உற்பத்தி செய்வதில்லை கஷ்டப்படாமல் பணம் செலுத்தி வாங்கிக்கொள்கிறோம். யாரோ ஒரு தொழிலாளியில் உழைப்பிற்கு பணம் செலுத்துகிறோம். அப்பணத்தின் நியாயமான பகுதி தொழிலாளியை சென்றடைவதில்லை மாறாக உற்பத்தி நிறுவனங்களும் வியாபாரிகளும் உழைக்காமல் பெருலாபம் ஈட்டுகின்றனர். மற்றைய விடயம், போட்டி நிறைந்த வியாபாரத்தில் வியாபார அதிகரிப்பிற்காக பொருளின் விலை குறைக்கப்படுகின்றது. அதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க தொழிலாளி அதிகமாக உழைப்புக்குள்ளாக்கி நசுக்கப்படுகின்றான். இதுவே இந்நூலின் கருவாக அமைந்நதது.
மூலதனம்
முதல் பகுதி  1867
இரண்டாம்,முன்றாம் பகுதி அவரின் உற்ற நண்பனான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) இனால் தொகுத்து 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது. 
நான்காவது பகுதி Theories of Surplus-Value ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky இனால் தொகுத்து வெளியிடப்பட்டது.

“பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேலான விடயம்”. - கார்ல் மார்க்ஸ்

ஒரு சில தகவல்கள் : விக்கிபீடியா மற்றும் இணையம்




ஞாயிறு, 17 ஜூன், 2012

பிரபஞ்சம்

நமது பிரபஞ்சத்தில் சூரியன் மற்றும் கிரகங்கள் என்பனவற்றின் மையம் சூரியனே ஆகும். ஆனால் சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியே மையம் என்று கருதப்பட்டது. நமது பிரபஞ்ச தோற்றம் பற்றி யோசிக்கும் போது நமக்குள் ஏராளமான சந்தேகங்களும் கேள்விகளும் எழுவதை யாராளும் மறுக்க முடியாது. இவை அணைத்திற்கும் பதில் தருவது என்பது என்னால் முடியாத காரியம். முடிந்தளவு நான் படித்த தேடி அலசிய விடயங்களை உங்களுடன் பகிரப் போகிறேன்.

பிரபஞ்ச தோற்றம் பற்றி பார்த்தால் அணைவராலும் ஏற்றுக்கொள்ளப்ட்ட ஒரு கோட்பாடுதான் ஜார்ஜ் காமாவ் ஊகித்த "பெரு வெடிப்புக் கோட்பாடு" (Big Bang Theory)    20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.

"Big Bang Theory" எனப்படுவது  பூச்சியத்திலிருந்து (எதுவுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து) திடீரென வெடித்து பரவியதே இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ஆரம்ப நிலையை ஆங்கிலத்தில் "singularity" என கூறுவர். இந்த ஆரம்ப புள்ளிக்குள் தான் பிரபஞ்சத்தின் அடிப்படையான நான்கு விசைகள் தோற்றம் பெற்றன. புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, வலிமையான அணு விசை மற்றும் ஐதான அணு விசை என்பனவே அந்த நான்கு விசைகளாகும். singularity எனப்படும் அந்த ஆரம்பபுள்ளியினுள் சமநிலையில் இந்த நான்கு விசைகளும் காணப்பட்டன. புவியீர்ப்பு விசையினால் இந்த சமநிலை உடைக்கப்பட்ட போது ஒளியை விட வேகமாக அண்டம் விரிவடைய தொடங்கியது. இந்த விரிவாக்கமானது எல்லாத்திசையிலும் சமசீராகவே நடைபெற்றது. வெடிப்பு சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது கண்ணால் அவதானிக்கக் கூடிய பிரபஞ்ச வெளியை அடைக்கும் பொருள்,சக்தி என்பவற்றில் 70 வீதம் கரும் சக்தியும், 25 வீதம் கரும்பொருளும், 4 வீதம் விண்மீன்களுக்கிடையில் சிதறிக் கிடக்கும் ஐதரசன்,ஹீலியம் வாயுக்களும், 0.5 வீதம் நட்சத்திரங்களும்,0.3 வீதம் நியூட்ரினோக்களும்,0.03 வீதம் கடின மூலகங்களும் அடங்கியிருக்கின்றன. Big bang வெடிப்பு நிகழ்ந்து சுமார் 380,000ஆண்டுகளின் பிறகே முதலாவது நட்சத்திரம் தோன்றியதாக கூறபடுகிறது.

நட்சத்திரம் என்பது விண்வெளியில் இருக்கும் பெரிய ஒளிரும் கோளம் அல்லது வாயுக் கோளம் எனலாம். பல மில்லியன் வருடங்கள் உயிர் வாழும் நட்சத்திரம் ஒரு கோளமாக இருப்பதற்கு காரணம் அதிலிருக்கும் ஈர்ப்பு விசை. ஈர்ப்பு விசை ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி செயல் பட்டாலும் அது ஒரு புள்ளியில் விழாமல் இருப்பதற்கு காரணம் மைய விலக்கு அழுத்தம். இந்த இரண்டின் காரணமாக ஒவ்வொரு நட்சத்திரமும் நடுநிலையில் வாயுக்களின் கோளமாக இருக்கிறது. ஈர்ப்பு விசை வென்றால் நட்சத்திரம் சுருங்கும். அழுத்தம் வென்றால் விரிவடையும், வெடிக்கவும் செய்யும். நட்சத்திரத்தில் இருக்கும் வாயுக்கள் எரியும் போது ஈர்ப்பு விசைக்கு சமமான அளவு அழுத்தம் உண்டாகி நட்சத்திரத்தை நடுநிலை கொள்ள செய்கிறது. நட்சத்திரங்கள் எப்பொழுதும் நடுநிலையாக இருந்து விடுவதில்லை.
ஒரு நட்சத்திரத்தை சுற்றி உள்ள தூசு துணிக்கைகள் அந்த நட்சத்திரத்தின் புவியீர்ப்பு விசையினால் நெருகமடைந்து சிறிய துகள்கள் சேர்ந்து துணிக்கைகள் உருவாகின்றன. சிறிய அளவில் உள்ள துணிக்கைகள் சேர்ந்து கல்லாக மாறுகின்றன.காலபோக்கில் இவ்வாறு துணிக்கைகள் சேர்ந்து கோள்கள் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு தோற்றம் பெற்ற கோள்கள் புவியீர்ப்பு விசை காரணமாக நட்சத்திரங்களை சுற்ற ஆரம்பிக்கின்றன. இதனால் சூரிய குடும்பங்கள் தோற்றம் பெற்றன. 
பால் வீதி என்பது பல மில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும் ஒரு விண்மீன். விஞ்ஞானிகளின்  கணிப்பின்படி பிரபஞசத்தில் சுமார் 100 பில்லியன் விண்மீன்கள் உள்ளன. ஒவொரு விண்மீனிலும் சுமார் நூறு முதல் இருநூறு பில்லியன் வரையிலான நட்சத்திரங்கள் உள்ளன.
பால் வீதியின் விட்ட அளவை கணிக்க ஒளி ஆண்டு என்ற அளவு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம். ஒளி ஒரு நொடிக்கு 300,000 கிமீ செல்லும். ஒளி வருடம் என்பது 365 x 24 x 60 x 60 x 300,000 = 94,60,80,00,00,000 கிமீ . பால் வீதியின் விட்டம் கிட்டதட்ட 1,00,000 ஒளிவருடங்கள். 
பிரஞ்சத்தின் இன்றைய வயது சம்பந்தமாக பார்த்தால். பிக்பாங் நிகழ்ந்து 8 பில்லியன் வருடம் கழித்து சூரிய குடும்பம் உருவானதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.


பெருவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து இன்று வரை விரிவடையும் வேகம் அதிகரித்து கொண்டு வரும் பிரபஞ்சம் அண்ணளவாக 13.75 பில்லியன் வருடங்கள் பழையது ஆகும். இன்று பரிணாமமடைந்து வரும் பிரஞ்சத்தில் தற்போது காணப்படும் மிகப் பெரிய பொருள் சுப்பர்கிளஸ்டர்ஸ் எனும் விசேட அண்டங்களின் கூட்டு ஆகும். தற்போது விரிவடைந்து வரும் பிரபஞ்சம் அக வெளியில் வேறு பொருள் நுழைவதை தடுப்பதுடன் புதிதாக ஈர்ப்பு விசையுடைய பொருட்கள் உண்டாவதையும் நிறுத்துகின்றது.