கடவுள் நம்பிக்கைப் பற்றி பேசும் போது முக்கியமாக இரண்டு விடங்கள் பற்றி விவாதிக்க வேண்டியிருக்கின்றது. ஆஸ்திகம் மற்றும் நாஸ்திகம், ஆஸ்திகம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், நாஸ்திகம் என்பது இறைமறுப்பாளர்கள் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை குறிப்பிடும் சொல்லாக அமைகின்றது.
ஆஸ்திகம் = ஆஸ்தி + அகம்
நாஸ்திகம் = நாஸ்தி + அகம்
ஆஸ்தி + அகம் = "ஆஸ்தி" என்பது உடைமை அல்லது சொத்து என்று பொருள் படும், அகம் என்பது மனம்.
நாஸ்தி + அகம் = "நாஸ்தி" என்பது அழித்துவிடுவது அல்லது இல்லாதொழிப்பது, அகம் என்பது மனம்.
நம்மில் நிறைய பேர் ஆஸ்திகவாதிகள் (ரொம்ப நல்லவர்கள்) என்பதால் அதைப்பற்றி ஆராய அவசியமில்லை என்று நினைக்கின்றேன்.
நாஸ்திகம் (ரொம்ப பாவம்) = மனதை அழித்து வாழக்கூடியவர்கள் என்று பொருள் படுகின்றது. இந் விரிவாக்கம் எந்தளவிற்கு சரி என்று தெரியவில்லை. என் அறிவிற்கு எட்டியவரை என்னால் முடிந்தது இவ்வளவுதான். "நாஸ்திகம்" என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் "நாஸ்திகவாதி" ( மனதை அழித்து வாழக்கூடியவன்) என்பவன் இரக்கமில்லாதவன். கெட்டவன், கொடியவன் யோசித்துதுப்பார்த்தால் இப்படித்தான் பொருள் வருககின்றது. இறை மறுப்பாளன் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். பகுத்தறிவாளன் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏனெனில், இப்போதுதான் பகுத்தறிய ஆரம்பித்திருக்கிறோம்.
இனி......
கடவுள் என்பவர் யார் ? என்று கேட்டால்,பொதுவான விடயங்கள்
ரொம்ப நல்லவர், வள்ளவர், அன்பானவர், நீதியானவர், நேர்மையானவர், உண்மையானவர், இரக்கமுள்ளவர், தூணிலும் இருப்பார்-துரும்பிலும் இருப்பார் இதில் ஐந்து தொழில்கள் வேறு (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளள்) இவை யாவும் எந்தளவிற்கு உண்மை சாத்தியம் என்று மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் யோசித்துப்பார்க்கலாம். மொத்ததில் உயிர்கள் அணைத்தையும் படைத்து வழி நடத்துவது கடவுள்ததான் என்பது கடவுள் நம்பிக்கையுள்ள அணைவரினதும் வாதமாகும். அப்படியானால் ஒவ்வொரு மனிதனையும் கடவுள்தான் படைத்து கண்கானிக்கின்றார் என்ற முடிவிற்கு வர முடிகிறது. அப்போ கொலைகாரன், கொள்ளைக்கரன், பெண்களை-சிறுவர்களை கற்பழித்தவனையும் இந்த கடவுள் தான் (ரொம்ப நல்லவர்) படைத்தார் என்பதை மனசாட்சியுள்ள உங்களால் ஏற்றுக்கொள்ள முடியகிறதா? ஏற்றுக் கொண்டால் நீங்கள் நீங்கள் ரொம்ப நல்லவர்தான். ஏன் எந்த பாவமும் அறியாத சிறுமிகள் (யுத்தத்தில்) கொள்ளப்படவில்லையா? 16 வயதிற்கும் குறைவான பாடசாலை மானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட வில்லையா? ஆயிரக்கணக்கானர்கள் கொல்லப்படும் போது என்ன செய்தார் இந்த ரொம்ப நல்லவர்(கடவுள்). ஒரு நேர உணவுகூட இல்லாமல் எத்தனை பேர் தவிக்கின்றார்கள் (கடவுள் எல்லோருக்கும் பட்டினி போடாமல் படியளப்பார் என்று எங்க வீ ட்டில் கூட சின்ன வயதில் சொன்னார்களே) இன்னும் நிறைய இருக்கு எழுத முடியவில்லை.. "ஒரு தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்" எழுதி வைத்து விட்டு பாரதி போய்விட்டான் எம்மால் வாசித்துவிட்டு பெருமூச்சி மட்டுமே விட முடிகின்றது. இதுதான் கடவுளின் நியதி என்று நீங்கள் சொன்னால் ம்ம்ம்ம்................ கடவுள் இருக்கின்றார் என்று நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.
கடவுள் நம்பிக்கை உடைய அணைவரும் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும் கடவுளை நம்பி எந்தக்
காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட
டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள்
நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்?
இறைமறுப்பு அவரவர்கள் மன உணர்ச்சி பகுத்தறிவு ஆகியவற்றை கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல என்பதே நிஜம்.
இப்போது கூட கடவுள் இல்லையென்று சொல்வதை விட கடவுள் என்று ஒருவர் இருக்க வேண்டும். அப்போதான் மனிதனில் மனிதமும் மாற்றமும் வரும். அது நடக்காது என்பதால், நான் பகுத்து அறிந்து கொண்டிருக்கும் இறைமறுப்பாளனே!!
இந்த பதிவின் யாரையும் வேதனை படுத்த நினைக்க வில்லை என் மனதில் உள்ள விடயங்களை மட்டுமே எழுதியிருகின்றேன். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.....
கருத்துக்களில் பிழை இருப்பின் மன்னியுங்கள்.