விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய 15 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராஜ் கமல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 26ஆம் தேதி அதாவது இன்று, படத்தை பார்த்து 28ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தது. ஏற்கனவே விஸ்வரூபம் 25.01.2013 இன்று வெளியாகும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டது.
இதையடுத்து, ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் தியேட்டர்களில் நேரிடையாகவும், இணையதளம் மூலமாகவும் டிக்கெட் வாங்கினர். இந்த நிலையில் தமிழக அரசின் திடீர் தடையால், விஸ்வரூபம் வெளியாகும் தியேட்டர் உரிமையாளர்கள், டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை இன்று முதல் திரும்ப கொடுக்கிறது.
சென்னை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை 11 மணிக்கு கவுண்டர்களில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக