சனி, 19 மே, 2012

செவ்வாய் (MARS)


செவ்வாய் சூரியனிலிருந்து 4 வது இடத்திலும் பூமிக்கு அடுத்ததாகவும் காணப்படுகின்றது. செவ்வாய், போபோஸ் , டெயிமோஸ் எனும் இரு துணைக் கோள்களைக் கொண்டுள்ளது.  தரையின் சிவப்பு நிறம் காரணமாக Red Planet என அழைக்கப்படும் செவ்வாய், ரோமானியர்களின் யுத்தத்துக்கு உரிய கடவுளான MARS எனும் பெயரை சூடியுள்ளது. ஏனைய கிரகங்ககளிலும் பார்க்க செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. தரைப்பகுதி சிவப்பாகக் காணப்படுவதற்குக் காரணம் அதன் மேற்பரப்பில் உள்ள துரு அல்லது இரும்பு ஒக்ஸைட்டு ஆகும்.

செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. செவ்வாயில் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக காணப்படுகின்றது. துருவப்பகுதிகளில் உள்ள பனி பெரும்பாலும் கார்பனீரொட்சைட்டின் உலர்ந்த வடிவமாகும்.

ஆராய்ச்சியின் அடிப்படையில் விண்கலங்கள், தொலைக்காட்டிகள் மற்றும் செய்ம்மதிகள் மூலம் ஆராயப்பட்ட, ஆராய்ச்சி செய்யப்பட்ட கோள் இதுவேயாகும்.  சாதாரணமாக பார்க்கும் போது சந்திரனுக்கு அண்மையில் பிரகாசமான நட்சத்திரம் போல் காட்சியளிக்கும் செவ்வாய் தொலைக்காட்டியால் தெளிவாக பார்க்க முடியும். அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் செவ்வாய் குறித்து ஆராய்வதற்கு ஆர்வம் காட்டின.


செவ்வாய் பற்றிய சுருக்கமான தகவல்கள்
சராசரி ஆரம் 227,936,640 கிமீ
வட்டவிலகல் 0.09341233
சூரியனை சுற்றும் காலம் 686.98 நாட்கள்
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்  (Synodic Period)  779.95 நாட்கள்
சராசரிச் சுற்று வேகம் (சுற்றுப்பாதையில்) 24.1309 கிமீ/செக்
அச்சின் சாய்வு 1.85061 பாகை
துணைக்கோள்களின் எண்ணிக்கை 2
மையக்கோட்டு விட்டம் 6,794.4 கிமீ
மேற்பரப்பளவு 144 மில்லியன் கிமீ2
திணிவு 6.4191 × 1023 கிகி 
சராசரி அடர்த்தி 3.94 கிராம்/செமீ3
மேற்பரப்பு ஈர்ப்பு 3.71 மீ/செக்2
சுழற்சிக் காலம் 24.6229 மணி
அச்சுச் சரிவு 25.19 பாகை
தப்பும் வேகம் 5.02 கிமீ/செக்
மேற்பரப்பு வெப்பநிலை குறுகியது 133K மத்திய 210K அதிக 293K

வளிமண்டல இயல்புகள்
கரியமில வாயு 95.32%
நைதரசன் 2.7%
ஆர்கன் 1.6%
ஆக்ஸிஜன் 0.13%
கார்பன் மோனாக்சைடு 0.07%
நீராவி 0.03%

நாசாவின்  ஸ்பிரிட் மற்றும் ரோவர் என்பன செவ்வாயின் தரையில் இறங்கி அதன் மேற்பரப்பின் இயல்புகளை ஆராய்ந்தன. இவை ஆரம்பத்தில் ஒழுங்காக இயங்கிய போதும் சில மாதங்கள் கழித்து இவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து நாசாவால் செலுத்தப்பட்ட மார்ஸ் குளோபல் செர்வெயோர் எனும் செய்மதி செவ்வாயின் தென் துருவத்தை ஆராய்ந்து அங்கு பனிப் பாறைகள் விலகுவதைக் கண்டுபிடித்தது. செவ்வாய்க் கிரகம் இத்தனை தீவிரமாக விஞ்ஞானிகளால் ஆராயப்படுவதற்குக் காரணம் அங்கு உறை நிலையிலோ வாயு நிலையிலோ நீர் காணப்படுமிடத்து வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்பதாகும்.




செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சச்சின் பிறந்த நாள்


 கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்தநாள்.  1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி மும்பையில் பிறந்த சச்சின் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுறார். அவருக்கு பிறந்த நாள்  வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
டெண்டுல்கர் தனது பிறந்தநாளை மனைவி அஞ்சலியுடன் சண்டிகாரில் உள்ள அகார்ட் நட்சத்திர விடுதியில் கொண்டாடினார். மும்பை அணியை சேர்ந்த தினேஷ் கார்த்திக், பிராங்ளின், ஒஜா, போலார்ட் உட்பட வீரர்கள் டெண்டுல்கரை சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சச்சின் 188 டெஸ்டில் விளையாடி 51 சதமும், 65 அரை சதமும் அடித்து 15, 470 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 463 ஒருநாள் போட்டியில் விளையாடி 49 சதமும், 96 அரை சதமும் அடித்து 18,429 ஓட்டங்கள் எடுத்துள்ள இந்த கிரிக்கெட் மாமனிதனுக்கு வாழ்த்து தெரிவிப்பபதில் பெருமையடைகின்றேன்.

கிரிக்கெட்டில் அதிக சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் தான் அவர் சாதனைகளை ஏற்கனவே அலசிவிட்டடேன். சச்சினின் சாதனைகள் பற்றிய பதிவை பார்ர்காதவர்கள் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

வெள்ளி (venus)


இதற்கு முதல் பதிவில் புதன் கோள் பற்றி பார்த்தோம். ஆடுத்து வெள்ளி பற்றி பார்ப்போம்.

சூரியனிலிருந்து மூன்றாவதாகவும் நமது பூமிக்கு மிக அன்மையிலும்  அமைந்துள்ளது. இரவு நேரத்தில் நிலவிற்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானமாகும். வௌளியை காலை நட்சத்திரம் (விடி வெள்ளி)மாலை நட்சத்திரம் (அந்தி வெள்ளி) என்றும் அழைக்கப்படுகின்றது அதற்கான காரணம் சூரிய உதயத்துக்கு முன்னும், சூரிய மறைவிற்கு பின்னும் வெள்ளி உச்ச பிரகாசமடைகின்றது.

வெள்ளி தன்னை தானே சுற்ற எடுக்கும் காலம் 243 (243.0187) நாட்கள் 
சூரியனை சுற்ற எடுக்கும் காலம் 227 .4 நாட்கள்

 கோள்களிலேயே ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்காத கோளும் வெள்ளியாகத்தான் இருக்க வேண்டும் காரணம் சாதாரண மக்களுக்கும் எளிதாக காணக்கூடியதாக இருக்கன்றது. ஆகையினால் ஆரம்ப காலல மக்களும் வெள்ளி பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர். பாபிலோனியர்கள் கூட வெள்ளி பற்றி எழுதி வைத்துள்ளனர். ஆனால் பண்டைய கிரேக்கர்கள் விடி வெள்ளியும் அந்தி வெள்ளியும் ஒன்றென்பதை அறியாத காரணத்தினால் இரு வேறு பெயர்களையும் சூட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்து. வெள்ளிக்கு எவ்வித உப கோள்களும் இல்லை.

  1. வெள்ளியின் சராசரி ஆரை 108,208,930 கிமீ, 
  2. சுற்றுக்காலம் 224 (224.701) நாட்கள்
  3. பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம் (Synodic Period) 583 (583.92) நாட்கள்
  4. சராசரிச் சுற்று வேகம் 35.0214 கிமீ/செக்
  5. அச்சின் சாய்வு 3.39471°

பௌதீக இயல்புகளை பார்த்தால்

மையக்கோட்டு விட்டம் 12,103.6 கிமீ
மேற்பரப்பளவு 4.60×108 கிமீ 2
திணிவு 4.869×1024 கிகி
சராசரி அடர்த்தி 5.24 கி/செமீ 3
மேற்பரப்பு ஈர்ப்பு 8.87 மீ/செக்2
சுழற்சிக் காலம் 243.0187 நாட்கள்
அச்சுச் சரிவு 2.64°
தப்பும் வேகம் 10.36 கிமீ/செக்

பௌதீக இயல்புகளை பார்த்தால்

வளியமுக்கம் 9321.9 kPa
கரியமில வாயு 96%
நைட்ரஜன் 3%





கோள்களிலேயே வெள்ளியில் மட்டும்தான்  சூரியன் மேற்கே உதிக்கின்றது. இது வெள்ளி கிரகத்திற்கே உள்ள தனிச் சிறப்பு.அதற்கு காரணம் வெள்ளி தனது அச்சில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழல்கின்றது. பூமியும் மற்ற கோள்களும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழல்கின்றது அதனால்  சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்றது.



திங்கள், 23 ஏப்ரல், 2012

புதன் (mercury)


முதல் பதிவில் பூமி (Earth) பற்றி பார்த்துவிட்டதால், இன்று புதன் (mercury) பற்றி பார்ப்போம். சூரியனுக்கு மிக அருகில் முதலாவது கோளாக அமைந்துள்ளதால் மிகவும் வெப்பமாக காணப்படுகின்றது.  சூரியனை நோக்கிய பகுதியில் வெப்பநிலை 800 பாகை பரனைட்டும் எதிர்ப்புறத்தில்      -300 ( மைனஸ்) பாகை பரனைட்டும் ஆகக் காணப்படுகின்றது.

புதன், கோள்களிலேயே மிகவும் சிறியதாகும். அளவில் நம் பூமியை விட 3 மடங்கு சிறியதாகும். இயற்கையாகவே புதனுக்கு துணை கோள்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2008 ஜனவரியல் அனுப்பப்பட்ட மெசஞ்சர் விண்கலம்  2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு தற்போது புதனின் துணைக்கோளாக மாறியது. இவ்விண்கலம் புதனுக்கு 2 வதாக அனுப்பப்ட்டதாகும். முதலாவதாக அனுப்பட்ட விண்கலம் மாரினர் 10 (Mariner 10) : 1974-1975.

தன்னை தானே சுற்றிக் கொள்ள 5 நாட்களும் சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 ( 87 நா 23.3 ம) நாட்களும் செல்கின்றன இது பூமியை விட 59 மடங்கு அதிகமாகும்.அதனால் புதனில் இரவு பகல் மாறுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கின்றன. சூரியனைச் சுற்றி சுற்று வட்டப் பாதையில் 50 Km/s (47.8725 Km/S) வேகத்தில் பயணிக்கின்ற போதிலும் தன்னைத் தானே சுற்றும் வேகம் மிகக் குறைவு.

வளி மண்டல இயல்புகளை பார்த்தால்,

பொட்டாசியம்31.7%
சோடியம் 24.9%
அணு ஒட்சிசன் 9.5%
ஆர்கன் 7.0%
ஹீலியம் 5.9%
மூலக்கூற்று ஒட்சிசன் 5.6%
நைதரசன் 5.2%
காபனீரொட்சைட்டு 3.6%
நீர் 3.4%
ஐதரசன் 3.2%

பௌதீக இயல்புகள்

  •  மையக்கோட்டு விட்டம் 4879.4 கிமீ
  • மேற்பரப்பளவு 7.5 × 107 கிமீ 2
  • திணிவு 3.302×1023 கிகி
  • அடர்த்தி 5.43 கி/சமீ
  • மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீ/செக்2
  • சராசரி மேற்பரப்பு வெ.நிலை: நாள் 623 K
  • சராசரி மேற்பரப்பு வெ.நிலை: இரவு 103 K
  • சராசரி சுற்று வேகம் - 47.8725 Km/S

புதனில் கடினமான பாறைகளுடன் கூடிய தரை மேற்பரப்பில் சூரிய குடும்பம் தோன்றியதிலிருந்து இலட்சக் கணக்கான விண் கற்களும் வால் வெள்ளிகளும் மோதி வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்டகுழிகள் இதன் மேற்பரப்பில் காணப்படுகின்றன. சூரியனுக்கு மிக அண்மையில் இருப்பதால் புதனைப் பற்றி மிகக் குறைவாகவே ஆராயப்பட்டு வந்துள்ளது எனலாம். இதன் ஆராய்ச்சி 75% க்கும் குறைவானமாக இருக்கும் என தெரிகிறது. (சரியாக தெரியவில்லை)
 

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பூமி



உயிரினங்கள் வாழ மிக பொருத்தமான கிரகம் நமது பூமியாகும். சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ளது.  பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது. சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி மூலம் சூரியனுடன் சேர்ந்து 450  கோடி வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது. எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி ஒரு பில்லியன் வருடங்களே ஆகின்றன. 
 புவியின்  மேற்பரப்பில் 71%  வரை உப்பு நீருள்ள கடலாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. மேற்பரப்பு மூலகங்களின் அளவை பார்க்கும் போது சிலிக்கன்  60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன. பூமியில் இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீஷியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும்அலுமினியம் (1.4%), மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது, மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்க்கான சாத்திய கூறுகள் அதிகம் எனலாம்.
பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365 1/4 நாட்கள்
சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் - 29.783 Km/s
பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சுழல்கிறது
சுற்றளவு (கிடை அச்சில்) - 40 075.02 Km
பூமியின் நிறை ஏறக்குறைய 5.98×1024 Kg
நீள் கோள மேற்பரப்பளவு - 510 072 000 Km2
சராசரி அடர்த்தி - 5.5153 g/cm3
 
துணைக் கோள் - 1 (சந்திரன்)

535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல ராட்சத பல்லிகள் மற்றும் பறவையினங்க எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது. இதில் தப்பியது எலியை போன்ற பாலுண்ணிகள் மட்டுமே.

புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது  மேலும் இச்சூழல் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 21 ஏப்ரல், 2012

அக்னி 5


கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து தாக்கும் அதி நவீன அக்னி -5 ஏவுகணை 19-04-2012 (வியாழன்) காலை 8.07 மணிக்கு, ஒடிசா மாநிலம், வீலர் தீவில் இருந்து,  வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையின் வெற்றியை இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். புதன் கிழமை (18-04-2012) இரவு 8.30 மணியளவில் அக்னி ஏவுகணை சோதித்துப்பார்க்கப்படுவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த சோதனை ஆடுத்த நாள்  நடத்தப்பட்டது. 

  
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில்,சீறிப்பாய்ந்த ஏவுகணை, முன் கூட்டியே திட்டமிடப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது.

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீற்றர் அகலம் 2 மீற்றர் ஆகும். 5,000 கிலோமீற்றர் தூரம் வரை இது தாக்கக் கூடியது. ஒரு டன்னுக்கும் மேற்பட்ட  எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது.


Inter-Continental Ballistic Missile-I CBM எனப்படும் மூன்று பாகங்களைக் கொண்ட இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் பகுதி ராக்கெட் தனியே கழன்றுவிடும். 

அடுத்து இரண்டாவது ராக்கெட் செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இதன் பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு, அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும். இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

3வது கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்.

உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய  நாடுகள் மட்டும் தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருந்தன (இப்போது இந்தியா வும்)  என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை 5,000 கி.மீ தாக்கக் கூடியது என்று இந்தியா சொன்னாலும் இது 8,000 கி.மீ வரை சென்று தாக்கக்கூடியது என்கிறது சீனா. இந்தியாவில் இருந்தவாரே சீனா மற்றுமனறி இந்தியாவை சுற்றியுள்ள ஏனைய பல நாடுகளையும் என்பதுதான் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது.

இதன் வேகத்தைப் பார்த்தால், ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும் போர் விமானத்தை விட 30 மடங்கு வேகத்திலும் சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் வல்லமை உடையது.அக்னி-5 ஏவுகணையை மேலும் கூர்மையாக்க மேலும் 5 முதல் 6 சோதனைகள் வரை தேவைப்படும் என்று தெரிகிறது. 

இதுவரை பொருளாதார மற்றும் ஆயுத பலத்தில் இந்தியா 5 வது இடத்திலும் இராணுவ பலத்தில் 3வது இருக்கின்றது.

கண்டம் விட்டு கண்டம் போய் தாக்கும் அதி நவீன ஏவுகணைகள் மற்றும் அந்நாடுகளின்  இராணுவ வீரர்கள் எண்ணிக்கைகளை  பார்த்தால்,

அமெரிக்கா
வீரர்கள் 1,569,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 450

சீனா
வீரர்கள் 2,285,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 66

இந்தியா
வீரர்கள் 1,325,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 01

ரஷ்யா
வீரர்கள் 956,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 292

இங்கிலாந்து
வீரர்கள் 174,000
கண்டம் விட்டு கண்டம் தாவி தாக்கக்கூடிய ஏவுகணைகள் 00





வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஆறு கால்களுடன் பிறந்த குழந்தை


பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்ததில் உள்ள சுக்கூரைச் சேர்ந்த 31 வயதான இம்ரான் அலி ஷேக் மற்றும் 27 வயதான அவரது தனைவி அப்ஷான் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இம்மாதம் 12ம் திகதி அறுவை சிகிச்சை மூலம் அப்சராவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் அக்குழந்தையின் உடலில் 6 கால்கள் இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.


எக்ஸ்ரே டெக்னீஷியனாக தொழில் புரியும் இம்ரானுக்கு குழந்தை சிகிச்சைக்காக செலவிட முடியாத நிலையில் சிந்த் மாகாண ஆளுனர் செலவை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து குழந்தை கராச்சியில் உள்ள தேசியக் குழந்தைகள் சுகாதார நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு ஐசியுவில் வைக்கப்பட்டது.


தற்போது பிறந்துள்ள குழந்தையுடன் பிறந்த மற்றுமொறு குழந்தை வளர்ச்சியடையாததால் அதன் உடல் பாகங்களும் சேர்த்து இக்குழந்தைகப்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஐந்து பேர் கொண்ட விஷேட மருத்துவ குழுவினரால் இந்த குழந்தையின் உடம்பில் உள்ள மேலதிக 4 கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார்கள். பாகிஸ்தானில் இப்படி ஒரு குழந்தை பிறந்தது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.